(Reading time: 40 - 80 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 05 - சசிரேகா

  

கீர்த்தனாவின் அழுகை தேவநாதனை கஷ்டப்படுத்தவே அவன் அவளிடம் மென்மையாக

   

”ஷ் அழாத கீர்த்தனா ஒண்ணும் இல்லை, நான் இருக்கேன்ல என்னாச்சி நல்லாதானே தாமரையோட பேசிக்கிட்டு இருந்த அவங்க ஏதாவது சொல்லிட்டாங்களா”

   

என கேட்க அவளோ பாட்டி வாங்கிய சத்தியத்தை மனதில் வைத்துக் கொண்டு தேவனை பார்த்தாள்

   

”தெரியலை எனக்கு என்னமோ பயமா இருக்கு”

   

“பயப்படாத நான் இருக்கேன்ல, நான் உன்னை பார்த்துக்கறேன் வா இப்படி வா” என அந்த பண்ணை வீட்டில் இருந்த முற்றத்தில் ஒரு தூணுக்குச் சாய்ந்த படி அவன் அமர அவளை அவனுக்கு முன்புறமாக அமர வைத்து அவளை முதுகை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்து கைகளால் அவளது இடுப்பை வளைத்து இழுத்துக் கொண்டு அவளது தோளில் முகம் புதைத்த தேவாவின் செயலைக்கண்டு உடல் சிலிர்த்தாள் கீர்த்தனா. 

   

அவளால் அசையவும் முடியவில்லை கைகளையும் அவனது கையால் அடக்கி இடுப்புடன் வைத்துக் கொண்டதால் கீர்த்தனாவிற்கு காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தது. அவள் சந்தோஷ உணர்ச்சியில் அவனிடம்

   

”என்னை விடுங்க நான் போகனும்” என சிணுங்கலாகப் பேச தேவாவிற்கு நிம்மதியானது. எப்படியோ அவளது அழுகை ஓய்ந்ததே என நினைத்தவன்

   

”போலாம் இரு”

   

“நான் 9 மணிக்கு வீட்ல இருக்கனும்”

   

“8.45க்கு தெரு முனையில உன்னை விடறேன், இன்னும் 1 மணி நேரம் இருக்கு அதுவரைக்கும் காதலிக்கலாம்” என அவளை இன்னும் இறுக்கமாக அணைக்க

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.