(Reading time: 40 - 80 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

“ஆமாம்”

   

“ஏன்”

   

“என் பொண்டாட்டிக்கு நான் புடவை வாங்கித்தராம வேற யார் வாங்கி தருவா” என சொல்லி அவளது தோளை சுற்றி கைய போட்டு இழுத்து தன்னுடன் சேர்த்துக் கொண்டான்

   

”விடுங்க, அண்ணா வருவாரு”

   

என சொல்ல அவனும் விட்டான்

   

”நாளைக்கு காலையில கோயில்ல பார்க்கலாம் இப்படியே அழுது வைக்காத”

   

“அப்ப எப்ப கல்யாணம் பண்ணிக்கறது”

   

“2 நாள் டைம் கொடு. நான் வீட்ல நம்ம விசயத்தை சொல்லிடறேன் ஓகேவா”

   

“ஓகே” என அவள் சொல்லும் போதே தாஸ் குழப்பத்துடன் வந்தான்.

   

”கொடு” என கேட்க அவன் மறுத்தான்

   

”என்னடா”

   

என கேட்க அவன் பையிலிருந்து ஒரு புடவையை எடுத்துக் காட்ட அதை ஆசையாக வாங்கிய கீர்த்தனா

   

”இது எனக்கா சூப்பரா இருக்கு” என்றாள். ஆனால் தாஸோ அவளிடம் அது நான் வாங்கியது என்பது போல் சைகை செய்ய ஏமாற்ற முகத்துடன் தேவாவை பார்த்தாள் கீர்த்தனா

   

”அப்ப நீங்க வாங்கலையா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.