என அவன் சொல்ல அவளுக்கு உடனே தாமரை வைத்தியின் காதல் கதை மனதுக்குள் வர அவள் அந்த கதையை பேர் ஊர் சொல்லாமல் வேறு மாதிரியாக சொல்லலானாள்
”ஒரு கிராமத்தில ஒரு வீடு இருந்திச்சாம்” என அவள் சொல்ல தேவா அதற்கு
”ஒரு கிராமத்தில ஒரு வீடுதான் இருந்திச்சா அவ்ளோ குக்கிராமமா அது” என கேட்டுச் சிரிக்க அவளோ
”கிண்டல் பண்ணா கதை சொல்ல மாட்டேன்”
“சரி சரி சொல்லு”
“அந்த வீட்ல ஒரு அழகான பொண்ணு இருந்தாளாம்”
“உன்னைப் போல”
“அய்யோ நான் என்னை சொல்லலை இது கதை அந்த ஹீரோயின் பத்திச் சொல்றேன்”
“சரி சரி சொல்லு”
“நீங்க குறுக்க பேசினா நான் சொல்லமாட்டேன் ம் கொட்டுங்க அப்பதான் சொல்வேன்” என்றாள்
”முதல்ல இப்படி ஹஸ்கி வாய்சில பேசாத”
“ஏன் நான் பேசறது கேக்கலையா”
“நல்லா கேட்குது என்ன நீ பேசறது கேட்க குறுகுறுன்னு இருக்கு, அப்புறம் வேற மாதிரி எண்ணம் தோணும்”