Page 5 of 41
கண்டு அவள் முன் கோபமாக நின்றான் தேவா. அவளும் போனை அவசரமாக கட் செய்துவிட்டு
”என்ன?” என கேட்டாள்
“பாட்டிக்கிட்ட உண்மையை சொன்னியா”
“சொல்ல முடியலை டைம் கிடைக்கலை.”
”நம்பற மாதிரியில்லையே”
“நிஜம்”
“சரி உன் துணி பையில வேற துணியிருந்திச்சா”
“துணியா இல்லையே”
“இல்லை நான் ஒரு புடவையை வாங்கினேன். கேரளா காட்டன் அது உன் துணியில கலந்திருக்கும்னு நினைக்கிறேன் கொடு”
“என்கிட்ட இல்லை வேணா பாரு” என சொல்லி அவள் வாங்கிய துணிப்பையை தர அவன் அதை அலசி விட்டு மனதுள்
அது எங்க போயிருக்கும்? சரண்யாவோ தேவாவிடம்
“யாருக்கு அந்த புடவை?”
“சும்மாதான் புடவை வாங்கினேன். பிடிச்சவங்களுக்கு தரலாம்னு இருந்தேன்”
“பிடிச்சவங்கன்னா இந்த வீட்ல இருக்கற பெண்களுக்கா”