“இல்லை”
“அப்ப யாருக்கு”
“உன்கிட்ட அந்த புடவை நிஜமாவே இல்லயா”
“நிஜமா இல்ல” என அவள் பொய் சொல்ல அந்த அறையை விட்டு வெளியே வந்தவன் தாஸிடம் நடந்ததைக் கூற தாஸோ
”அவளிடம்தான் இருக்கும்” என போல சைகை செய்ய அதை எப்படி தெரிந்துக் கொள்வது என நினைத்தான். அந்நேரம் அங்கு வந்த பாட்டியிடம்
”பாட்டி நான் சரண்யாவை பத்தி உங்ககிட்ட பேசனும்”
“பேசு” என சொல்ல
”சரண்யாவை நான் கூட்டிட்டு வரலை அவளாதான் வந்தா அதுவும் நம்ப வீட்டுக்கு வந்தா”
“தெரியுமே சரண்யாதான் சொன்னா”
“அவள் சொன்னாளா எல்லாமே சொல்லிட்டாளா”
“சொல்லிட்டாளே”
“ஓ அப்படியா சரி சரி சாப்பாடு பரிமாறு பாட்டி, சாப்பிட்டு தூங்கறேன் ஒரே அசதியா இருக்கு” என சொல்ல அவரும் தாஸுக்கும் தேவாவுக்கும் சேர்த்து சாப்பாடு பரிமாறி விட அவர்களும் சாப்பிட்டு முடித்து அவரவர்கள் அறைக்குச் சென்றார்கள். சரண்யாவின் பிரச்சனை முடிந்ததாகவே தேவா நினைத்தான்.
தேவாவிற்கு படுக்கையில் படுத்ததும் கீர்த்தனாவின் நினைவு வந்தது. இன்று அவளுடன்