தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 34 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
விக்கிராந்தின் பேச்சை காரணமாக ராஜமின் முகத்தில் புன்னகை தோன்றியது!
“உன் பகல் கனவெல்லாம் நல்லா தான் இருக்கு, விக்கி! ஆனால் அழகிய இளவரசனா? எங்கே காணும்? எங்கே போயிருக்கான் அவன்?” என்று சொல்லிக் கொண்டே தேடுவது போல பாவனை செய்தாள் ராஜம்.
“மம்ஸ்! நீங்க ஒரு பேட் மம்ஸ்! காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு, ஆனால் உங்களை பாருங்க, இந்த ஸ்மார்ட் அண்ட் ஹாண்ட்சம் விக்கியை பார்த்து இப்படி சொல்லிட்டீங்க? கிரர்ர்ர்ர்....”
“நான் உண்மையை தான் சொல்வேன். சும்மா பேச்சுக்கெல்லாம் என்னால பொய் சொல்ல முடியாது. ஆனாலும் பாத்துடா! ப்ரியா கிட்ட நோஸ் கட் வாங்கப் போற, எதுக்கும் டெட்டால், பேண்ட்-எய்ட் எல்லாம் ரெடியா கைல வச்சுக்கோ.”
“இந்த காதல் இளவரசனை பத்தி உங்களுக்கு தெரியலை!. எவ்வளவு சீக்கிரம் எங்க கல்யாணம் நடக்குதுன்னு பாருங்க.”
“ரொம்ப நல்லது! அந்த ஜீவா இன்னும் இரண்டு மாசத்தில கனடா கிளம்பிடுவான். அதுக்கு...”
ராஜம் பேசி முடிக்கும் வரை காத்திருக்காமல்,
“ப்ச்... இரண்டு மாசம் எல்லாம் யாருக்கு வேணும்? அதுக்கு முன்னாடி எங்க கல்யாணமே நடந்து முடிஞ்சிடும் கவலைப் படாதீங்க,” என்றான் விக்கிராந்த்.
“உன் கனவில தானே நடக்கும்?” என்று வாரினாள் ராஜம்.
“பார்க்க தானே போறீங்க! சரி அதெல்லாம் அப்புறம், எனக்கு பெரியம்மா வீட்டு அட்ரஸ் கொடுங்க அம்மா!”
ராஜம் விக்கிராந்தை சந்தேகத்துடன் பார்த்தாள்.