மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 30 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“அது ஸ்பீடா வரலை. நான் தான் பயந்து ஃபாஸ்ட்டா ஓடினேன்!” நடந்ததை விவரித்துக் கொண்டிருந்த சத்யா, தென்றல்வாணன் முறைப்பதை கவனித்து விட்டு வாயை மூடிக் கொண்டாள்.
“எத்தனை தடவை உன் கிட்ட சொல்லிட்டேன்? எதுக்கு உனக்கு இதெல்லாம்?” குரலை தாழ்த்திக் கொண்டு மனைவியை கண்டித்தான் தென்றல்வாணன்.
“நெக்ஸ்ட் டைம் தனியா போக மாட்டேங்க!” சத்யா அமைதியாக பதில் சொன்னாள்.
“ஒவ்வொரு தடவையும் உனக்கு என்னவோ ஏதோன்னு பயப்பட வைக்குற சத்யா. இந்த ப்ரைவேட் இன்வெஸ்டிகேஷன் எல்லாம் உனக்கு வேண்டாம்.”
“இனிமேல் நான் போக மாட்டேன். சக்தியை போக சொல்றேன். சரியா?” குரலை மென்மையாக்கி கேட்டாள் சத்யா.
மறுத்து சொல்ல முடியாமல் பல்லைக் கடித்தான் தென்றல்வாணன்.
இவர்கள் இருவரின் பேச்சை கவனிக்காததுப் போல நின்றிருந்த சக்தி, அவள் அங்கே இருப்பதை காட்டிக் கொள்பவளாக ‘ஹ்க்கும்!’ என தொண்டையை சரி செய்துக் கொண்டாள்.
தென்றல்வாணன் இன்ஸ்பெக்டர் தோரணைக்கு மாறினான்.
“தேங்க்ஸ் சக்தி. இது இந்த கேஸ்க்கு ரொம்ப முக்கியமான ஆதாரம்!”
“இப்போ என்ன செய்றதா ப்ளான் இன்ஸ்பெக்டர்?” என தன் தோரணையில் வினவினாள் சக்தி.
“இந்த ட்ரோனோட டிசைன் செக் செய்யனும்,” என்றான் தென்றல்வாணன் சுருக்கமாக!
சக்தி மீதி தகவலையும் கொடு என்பதுப் போல தென்றல்வாணனை பார்த்திருந்தாள்.