மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 29 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
சக்தி அதிர்வது உணர்ந்து விலகி நின்ற சாந்ததுரை, “நோ, நோ சக்தி மேடம். திரும்ப அன்னைக்கு மாதிரி அடிச்சு சாம்பில் காட்டிறாதீங்க. இது நாம இவ்வளவு நேரம் சண்டைப் போடாம பேசினோமே அதுக்கான ஒரு ஸ்பெஷல் மொமேன்ட்டோ. வேற ஒன்னும் கிடையாது. வாங்க சின்ன வாக் போயிட்டு வருவோம். சத்யா எடுத்து எடுத்து கொடுத்தாங்கன்னு தோசையை கணக்கே பார்க்காம சாப்பிட்டேன். நடக்காம தூங்க முடியாது!”
சக்தியும் சாந்ததுரையும் சந்தித்த முதல் நாள், அவன் திருடனைப் போல அந்த வீட்டிற்குள் நுழைந்திருந்தான்! அவன் யார் என்று தெரியாது திருடன் என நினைத்து அடித்து கட்டி போட்டிருந்தாள் சக்தி! அதைப் பற்றி தான் இப்போது சாந்ததுரை குறிப்பிடுகிறான் என்பது சக்திக்கு புரியாமல் இல்லை!
தன் கையில் இருந்த மார்க்கரை மூடி போர்டில் வைத்து விட்டு சாந்ததுரையுடன் அவளும் நடந்தாள்.
சாந்ததுரை அவனின் மருத்துவ வாழ்க்கையில் சந்தித்த வினோத மனிதர்களை பற்றி சக்தியிடம் பகிர்ந்தான். சுவாரசியமான தகவல்களை அவன் பகிர்ந்ததால் கேட்பதற்கு சக்திக்கு போரடிக்கவில்லை.
மீண்டும் அவளின் அறைக்கு இருவரும் ஒன்றாக வந்து சேர்ந்தப் போது பல வருடங்களுக்குப் பின் அவளின் மனம் முதல் முறையாக லேசாகி இருப்பதாக உணர்ந்தாள்.
“திரும்ப வைட் போர்ட்ல எழுதப் போறீங்களா சக்தி?” என்றான் சாந்ததுரை.
“ஆமாம் எஸ்.டி. ஏதோ ஒரு விஷயம் என்ன நாக் செய்துட்டே இருக்கு. அது என்னன்னு கண்டுப்பிடிக்காம எனக்கு தூக்கமே வராது,” என்றாள் சக்தி நெற்றியை விரலால் தேய்த்துக் கொண்டே!
யோசிக்கும் நேரங்களில் அவள் அவ்வப்போது செய்யும் அந்த ‘மேனரிஸ’த்தை விழிகளால் பார்த்து ரசித்தவன், “நீங்க வெரி இன்ட்ரஸ்டிங் கேரக்டர் சக்தி! தெரியாத விஷயம் தெரியாததா இருக்குற வரைக்கும் தான் சுவாரசியமே! உங்க அன்நோன் எக்ஸை சீக்கிரம் கண்டுப்பிடிக்க