தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 42 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தியாகு ஏர்போர்ட்டினுள் சென்று, ஃபார்மாலிட்டிகளை வேக வேகமாக முடித்துக் கொண்டு, அவனுடைய விமானம் கிளம்ப இருந்த கேட்டை அடைந்தப் போது,
‘ஃபைனல் கால் ஃபார் மிஸ்டர் தியாகராஜன் குமரேசன் ஃபார் ஏர் இந்தியா ஃப்ளைட் டூ டெல்லி,’ என்று ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.
ஓட்டமும் நடையுமாக சென்று கேட் கதவை மூடும் ஒரு சில வினாடிகளுக்கு முன் போர்டிங் பாஸை கொடுத்து விட்டு ஃப்ளைட்டில் ஏறி அமர்ந்தான் தியாகு.
ஓடி வந்து ஏறியதில், மூச்சு வாங்கியது! வியர்த்துக் கொட்டியது! இதயம் படபடவென அடித்துக் கொண்டது!
ஆனாலும் அவனின் மனதினுள் இளையராஜாவின் மென்மையான பேக்கிரவுண்ட் இசையுடன், குயில்கள் இன்னிசை பாடிக் கொண்டிருந்தன.
கிருத்திகாவை பற்றி நினைக்கும் போதே அவனின் மனதினுள் இனித்தது!
உண்மையான காதல் எனும் உணர்வை வார்த்தைகளால் சொல்லி விளக்க முடியுமா என்று அவனுக்கு தெரியவில்லை.
காதல் என்று சொல்ல, வெள்ளை ட்ரஸ் போட்டுக் கொண்ட தேவதைகள் தோன்ற வேண்டும் என்றில்லை, மூளைக்குள் இருக்கும் ‘இன்விசிபில்’ பல்ப் ஏறிய வேண்டும் என்றில்லை, சுற்றி நின்று வயலின் கலைஞர்கள் இசைக்க வேண்டும் என்றில்லை, அது ஒரு விதமான புதிய உணர்வு!
இந்த காதல் வரும் போது, ஒரே ஒரு ‘catch’ என்னவென்றால், மனதினுள் தோன்றும் இந்த இனிய உணர்வின் கூடவே அறிவையும் கொஞ்சமேனும் பயன்படுத்த வேண்டும்!
மற்றபடி, காதல் என்ன என்பதை அதை அனுபவித்து தான் புரிந்துக் கொள்ள முடியும்.