ஆனாலும், அதற்காக இப்படியா யார் என்ன என்று பார்க்காமல் கத்துவது!!!! அவள் திட்ட நினைத்தது அவன் இல்லை என்று தெரிந்து என்ன செய்ய போகிறாள்??? மன்னிப்பு கேட்பாளோ?
தியாகு யோசனை மின்ன ‘ருத்ரமாதேவி’ பக்கம் பார்க்க, அவன் மனதில் தோன்றியதைப் போலவே அந்த இரண்டு பெண்களில் ஒருத்தியும்,
“இவர் கிட்ட சாரி சொல்லிடுங்க அக்கா. பாவம்,” என்றாள்.
எதிரே இருந்த தியாகுவை நேராக ஒரு பார்வை பார்த்த ‘ருத்ரமாதேவி’,
“தப்பு செய்யலைனா, பேச்சு நடுவுல நிறுத்தி என்னை ஏன் திட்டுறீங்கன்னு கேட்க வேண்டியது தானே, அதென்ன பே பேன்னு முழிச்சிட்டு நிக்குறது?? அப்படி நிக்குறவங்களை திட்டினாலும் தப்பில்லை,” என்று அவனுக்கும் கேட்பத்துப் போல சத்தமாகவே சொல்லிவிட்டு, அந்த இளைஞர்கள் பக்கம் சென்றாள்...
அங்கே அந்த இடத்தில் தான் அவள், அந்த ‘ருத்ரமாதேவி’ தியாகுவை அவள் பக்கம் உற்று பார்க்க வைத்தாள்!
ஒரு வேளை அவள் சாரி கேட்டிருந்தால், அவனும் கண்டுக்கொள்ளாமல் சென்றிருப்பான். அவளை அத்தோடு மறந்தும் போயிருப்பான்! ஆனால் இவளிடம் இருந்த ஏதோ ஒரு ‘எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்’ தியாகுவை அவள் பக்கமே பார்க்க வைத்தது.
அவள் அவனுக்கு கொடுத்த வசை மழையை விட ஸ்ட்ராங்காக அந்த இளைஞர்களிடம் பொழிந்துக் கொண்டிருந்தாள்.
தியாகுவிற்கு அவனையும் அறியாமல் அவனின் அம்மாவின் நினைவு வந்தது. அவனுடைய அம்மா இது போல கோப படுவார்கள், கத்துவார்கள் என்று அவனுக்கு தோன்றவில்லை. ஆனால், தவறை நேரடியாக கேட்டு விட வேண்டும் என்ற ‘ருத்ரமாதேவியின்’ அந்த வேகத்தை அம்மாவிடமும் பார்த்திருக்கிறான்.