தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 40 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
"சொல்லுங்கம்மா!"
ஆஃபீஸில் தன் இருக்கையில் அமர்ந்து இருந்த விக்கிராந்த், லேப்டாப்பில் ஈமெயிலை டைப் செய்துக் கொண்டே, மெல்லியக் குரலில் ராஜமுடன் செல் ஃபோனில் பேசினான்.
“விக்கி, கல்யாணத்துக்கு நல்ல நாள் பார்க்க சொல்லி இருந்தேன்...” என ராஜம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஆச்சர்யத்துடன் குறுக்கிட்டுப் பேசினான் விக்கிராந்த்.
“நாள் பார்க்குறீங்களா?? பெரியம்மா ப்ரியா கிட்ட பேசிட்டாங்களா? அவ ஓகே சொல்லிட்டாளா?? என் கிட்ட பெரியம்மா ஒண்ணுமே சொல்லலையே???”
“ப்ரியா இன்னும் சம்மதம்னு சொல்லலை...” என தொடங்கி, மேலே விபரம் சொல்லாது ராஜம் இழுக்கவும், விக்கிராந்திற்கு சட்டென்று டென்ஷன் எகிறி குதித்தது!
அவனிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் அவனுக்கே ஆச்சர்யத்தைக் கொடுத்தது! ஆனால் அதைப் பற்றி அதிகம் யோசித்துக் கொண்டிருக்காமல், “அம்மா, இழுக்காம என்னன்னு பட்டுன்னு சொல்லுங்க! ப்ரியா ஓகே’ன்னு சொல்லாம எதுக்கு நாள் எல்லாம் பார்க்குறீங்க???” என படபடத்தான் விக்கிராந்த்!
“எதுக்கு இப்போ டென்ஷன் ஆகுற விக்கி?” என்ற ராஜமின் நிதானமான குரல் அவனின் பதற்றத்தைக் குறைத்தது! ப்ரியாவிற்கு சம்மதமில்லாமல் அம்மா எதையும் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது! ஆனால் அந்த நம்பிக்கையே குழப்பத்தையும் ஏற்படுத்தியது!
“அம்மா, ப்ளீஸ் தெளிவா சொல்லுங்க! ப்ரியா கிட்ட பெரியம்மா பேசினாங்களா? என்ன நடந்துச்சு???”
“ஆமா, வைஜெயந்தி அக்கா பேசினாங்களாம்! ப்ரியா இன்னும் சரின்னு சொல்லலை, ஆனால் வேண்டாம்ன்னும் சொல்லலை!”