கீதாவிடம் இருந்து ஒரு அப்டேட்டும் இல்லை! அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவனுக்குப் புரியவில்லை!
மீண்டும் கீதாவிடம் கேட்கலாமா என்று யோசித்தவன், அவனின் நெருங்கிய உறவினளான கீதாவும், நெருங்கிய நண்பனான விஜயும் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறார்கள் என்றால், ஏதாவது காரணம் இருக்கும் என்று முடிவு செய்து அமைதியாக இருந்தான்!
அந்த நேரத்தில், பிஸ்னஸ் சம்மந்தப்பப்ட்ட ஒருவரை பிரசித்தி பெற்ற ஹோட்டல் ஒன்றில் சந்தித்து விட்டு கிளம்ப எழுந்த தியாகுவின் கண்களில் கிருத்திகாவின் அப்பா ரங்கராஜன் பட்டார்.
அந்த ஹோட்டலில் ரெஸ்டாரன்ட் மட்டும் இல்லாது பார் வசதியும் இருந்தது.
ரங்கராஜன் ஒரு இளைஞனுடன் பேச முயல்வதையும், அந்த இளைஞன் குடி போதையில் தள்ளாடியப்படி இருப்பதையும் தியாகு கவனித்தான். மேலே யோசிக்காமல் உடனேயே ரங்கராஜனின் அருகே சென்றான் தியாகு.
“... நீ யாரா இருந்தா எனக்கென்ன? போ ஓல்ட் மேன்,” என்று சொல்லி அந்த இளைஞன் தள்ளாடிக் கொண்டே ரங்கராஜனை தள்ளி விட, தியாகு அவர் விழாமல் தாங்கி பிடித்து நிறுத்தினான்.
பெரும் அதிர்ச்சியில் இருந்த ரங்கராஜன் தியாகுவை நன்றியோடு பார்த்தார்.
அவருக்கும் விஜயின் நண்பன் மற்றும் கீதாவின் உறவினன் என்ற விதத்தில் தியாகு நன்கு பரிச்சயமானவன் தான்.
“யார் அங்கிள் இவன்? குடிச்சிருக்கான்னு தெரியுது அவன் கிட்ட போய் எதுக்கு பேசிட்டு இருக்கீங்க???”
“இல்லைப்பா தியாகு! தெரிஞ்ச பையன், அவன் பேரு கார்த்திக். அவங்க அப்பா என் மகளுக்கு அவனை கல்யாணத்துக்கு பார்க்கலாம்னு வேற சொன்னார். இப்படி இருப்பான்னு நான்