மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 35 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“இன்னும் உங்களுக்கு புரியலையா ப்ரியம்வதா? நீங்க எங்க கிட்ட கொடுத்த கேஸ்ல கல்ப்ரிட்ஸ கையும் களவுமா பிடிச்சுட்டு இருக்கோம்,” என்றாள் சக்தி ஈஸியாக.
ப்ரியம்வதா புரியாமல் திகைத்து நிற்க, ஐஸ்வர்யா அதற்குள் அதிர்ச்சியில் இருந்து வெளி வந்திருந்தாள்.
“ஹலோ, என்ன பேசுறீங்க? யார் கிட்ட பேசுறீங்கன்னு ஞாபகம் இருக்குல?” சக்தியிடம் எரிந்து விழுந்தாள் ஐஸ்வர்யா.
சக்தி அசரவில்லை!
“ஞாபகம் இல்லாம என்ன, நல்லா ஞாபகம் இருக்கே மிஸ் ஐஸ்வர்யா! சாரி, சாரி, மிசர்ஸ் ஐஸ்வர்யா சந்தானகிருஷ்ணன்!”
சக்தி சர்வ சாதாரணமாக சொல்லி விட, முன்பை விட அதிகமாக அதிர்ந்துப் போன ப்ரியம்வதா, “என்ன?” என்றுக் கேட்டுக் கொண்டே அதிர்ச்சியுடன் ஐஸ்வர்யாவைப் பார்த்தாள்.
ஐஸ்வர்யாவிடம் இப்போதும் பெரிதாக மாற்றம் எதுவும் தெரியவில்லை! மாறாக,
“என்ன பேசுறீங்க? யாரது நீங்க சொல்றவங்க? எனக்கு தெரியாது,” என எந்த தயக்கமும் இல்லாமலே பேசினாள்.
“யாரைத் தெரியாதுன்னு சொல்றீங்க? உங்க ஹஸ்பன்ட் சந்தான கிருஷ்ணனையா? வாட் அ பிட்டி! நீங்க திறந்த அந்த ஜன்னல் வழியா இப்போ எட்டிப் பாருங்க. ட்ரோன் கிட்ட இருந்து தப்பிச்சு, இப்போ போலீஸ் கிட்ட மாட்டிக்கிட்டு இருக்க உங்க ஹஸ்பண்டை பார்க்கலாம்,” என்றாள் சக்தி
ஐஸ்வர்யா, ப்ரியம்வதா இரண்டுப் பேரும் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார்கள்.
அங்கே பார்த்த காட்சியில் மீண்டும் அதிர்ந்துப் போய், “ஸ்ரீனிவாசா இவ ஹஸ்பன்ட்?” என