சொல்லவும், கலைவாணியின் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் மனைவியை பார்த்து முறைத்தான்.
சத்யாவிற்கு அவனின் கோபம் அத்துப்படி என்பதால் அவன் பக்கமே பார்க்காது கலைவாணிக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த சக்தி பக்கம் பார்வையை பதித்திருந்தாள்.
அவளின் பார்வையை தொடர்ந்த தென்றல்வாணனுக்கு சக்தி மீதும் கோபம் வந்தது!
“சக்தி, ஐஸ்வர்யா ரிமோட் எடுத்ததை தாண்டி என்ன எவிடன்ஸ் இருக்கு உங்க கிட்ட? இது தப்பா போனா எவ்வளவு பெரிய பிரச்சனை ஆகும் தெரியுமா?” மனைவி மீதிருந்த கோபத்தை எரிச்சலாக சக்தியிடம் வெளிப்படுத்தினான் தென்றல்வாணன்.
“இப்போ எதுக்கு கோபப்படுறீங்க இன்ஸ்பெக்டர்? நீங்க பெரிய ப்ரூஃப், ரீசன் எதுவுமே இல்லாம வினாயக்கை இரண்டு தடவை அரெஸ்ட்
...
This story is now available on Chillzee KiMo.
...
யாருன்னு அவங்க கிட்ட விசாரிச்சோம். அவங்க ஒரு ஸ்லீப்பிங் பார்ட்னர் இருந்தார் அவர் இறந்துட்டாருன்னு சொன்னாங்க. சந்திரமௌலி தான் எல்லாத்தையும் ஹாண்டில் செய்றதாகவும் சொன்னாங்க. உண்மையில் அந்த ஸ்லீப்பிங் பார்ட்னருக்கு நேரடி ஃபேமிலி யாரும் கிடையாது. தூரத்து சொந்தமா ஒரு பொண்ணு இருந்தா. அவ தான் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யாவும் அவளுடைய கணவன் சந்தான கிருஷ்ணனும் டெக்னிகல் திருடர்கள்.