தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 42 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
"ஹலோ! இது ஸ்கூல், அதுவும் கேர்ள்ஸ் ஸ்கூல்! இங்கே பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி அப்படி என்ன பராக்கு பாக்குற வேலை?"
ப்ரியா வருகிறாளா என மும்முரமாக கவனித்துக் கொண்டிருந்த விக்கிராந்த், திடீரென ஸ்ரீனிதி அவன் பக்கத்தில் வந்து மிரட்டுவதுப் போல பேசவும் அதிசயத்துடன் அவளைப் பார்த்தான். ஒன்றிரண்டு வினாடிகளுக்கு பிறகே அவளின் கேள்வியின் பின்னே இருக்கும் காரணம் அவனுக்கு புரியவும்,
"ஓ! நீங்க தப்பா நினைச்சுட்டீங்க. நான் ஒருத்தங்களுக்காக வெயிட் செய்துட்டு இருக்கேங்க," என்றான் தண்மையாக.
ஸ்ரீ’யின் கோபம் இன்னும் அதிகமானது.
"வாட்? என் கிட்டேயே இதை சொல்ல என்ன தைரியம்! இவ்வளவு நாள் பஸ் ஸ்டாப், ரோட்ன்னு தான் இந்த வேலை செய்துட்டு இருந்தீங்க, இப்போ ஸ்கூல் பக்கத்திலேயும் ஆரம்பிச்சாச்சா? எங்க ஸ்கூல் மேனேஜ்மென்ட் ரொம்ப ஸ்ட்ரிக்ட். இது போல ஆக்டிவிட்டீஸ் எல்லாம் அலோ செய்ய மாட்டாங்க! எங்க ஹெச்.எம் பார்த்தா அவ்வளவு தான்! எந்த காலேஜ் நீங்க?"
ஸ்ரீ’யின் பேச்சு ஏற்படுத்திய தர்ம சங்கடத்தையும் மீறி, அவள் கேட்ட ‘எந்த காலேஜ்’ கேள்வி விக்கிராந்த் முகத்தில் புன்னகையை வரவழைத்தது!
"தேங்க்ஸ் ஃபார் யுவர் காம்ப்ளிமென்ட்," என்றான் மனதை மறைக்காமல்!
"வாட்?" என ஸ்ரீ மீண்டும் சீற,
"பின்னே என்னங்க, முப்பது வயசாகுற என்னைப் பார்த்து காலேஜ் பையன்னு சொன்னா அது காம்ப்ளிமென்ட் இல்லாம வேற என்ன," என இப்போதும் ஈசியாகவே பதில் சொன்னான் விக்கிராந்த்.