"நெனப்பு தான்! இந்த மாதிரி உதவாக்கரை வேலை செஞ்சு செஞ்சு இப்போ தான் ஃபர்ஸ்ட் இயரே வந்திருப்பன்னு நினைச்சேன், அதான்!"
விக்கிராந்த அதற்கும் புன்னகை மின்ன பதிலளிக்க உதட்டை அசைக்கும் போதே,
"ஹேய்! நீ கணபதி சார் மகன் விக்கிராந்த் தானே?" என்ற குரல் அருகில் கேட்டது.
விக்கிராந்த் பேச்சை நிறுத்தி விட்டு திரும்பி பார்த்தான். ஸ்ரீ’யும் கோகிலாவும் கூட குரல் வந்த பக்கம் பார்த்தார்கள்.
அங்கே இருந்த ஜெயந்தி விக்கிராந்தை அடையாளம் கண்டுக் கொண்டு பேசினாள்.
“நான் ஜெயந்தி, என்னை உனக்கு ஞாபகம் இருக்கா?? உன்னை சின்ன வயசுல பார்த்தது! அம்மா அன்னைக்கு வந்தப்போ போட்டோ காட்டினாங்க. இல்லைன்னா எனக்கு அடையாளமே தெரிஞ்சிருக்காது!”
ஜெயந்தி யார் என புரிந்துக் கொண்டதன் அடையாளமாக விழிகளை விரித்த விக்கிராந்த், "ஹலோ ஜெயந்தி ஆன்ட்டி, என்னை கரக்ட்டா கண்டுப்பிடிச்சிட்டீங்களே! எப்படி இருக்கீங்க?" என்றான்.
"எனக்கு என்னப்பா, இந்த ஸ்கூலோட மல்லுக் கட்டுற வேலை தான்," என்ற ஜெயந்தி அப்போது தான் அங்கே ஆச்சர்யமும், அதிர்ச்சியுமாக நின்றிருந்த ஸ்ரீ, கோகிலாவை பார்த்தாள்.
"இவங்களையும் உனக்கு ஆல்ரெடி தெரியுமா? இவங்க ப்ரியாவோட ஃப்ரென்ட்ஸ்!"
ப்ரியாவிற்கு தோழிகள் இருக்கிறார்களா என்ற ஆச்சர்யத்துடன், "ஓ!" என்றான் விக்கிராந்த்!
"இவர் ப்ரியாக்கு தெரிஞ்சவரா மேடம்?" ஸ்ரீ’யின் குரலில் இப்போதும் சந்தேகம் இருந்தது!
"தெரிஞ்சவரா? ப்ரியாவை கல்யாணம் செய்துக்கப் போறவர்," என்ற ஜெயந்தி, விக்கிராந்த்