(Reading time: 7 - 14 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

இருப்பாளோ???

   

வானில் பறக்க தொடங்கிய மனதை ஸ்ரீ’யின் ஆர்த்தி பற்றிய கேள்வியை நினைத்து அடக்கினான் விக்கிராந்த்.

  

அம்மாவும், வர்ஷாவும் ஸ்கூல் ஃபங்கஷனிற்கு வந்திருந்தார்களே அப்போது அவனைப் பற்றி பேசி இருந்திருக்கலாம். அவனும் அப்பாவும் அன்று ஆர்த்தி வீட்டிற்கு தான் சென்றிருந்தார்கள்!

   

அந்த யோசனையை பின்னுக்கு தள்ளி மீண்டும் கவனத்தை பள்ளி வாசலில் வைத்தான். 

   

மேலும் ஒரு சில மணித்துளிகள் சென்ற பின் ப்ரியா தூரத்தில் வருவது தெரிந்தது!

   

மெல்லிய ஆரஞ் நிறத்தில் ஆங்காங்கே கருப்பு வரிகள் இருந்த சேலையில் அழகாக தெரிந்தாள்!

   

அவள் முகத்தில் எப்போதும் இருக்கும் அந்த கண்ணுக்கு புலப்படாத மெல்லிய திரை இப்போதும் இருந்தது.

   

ஆனால், முகத்தில் சிறு அயர்வும் இல்லாமல், அப்போது தான் வேலைக்கு தயாராகி வருபவளை போல் வந்தவளை விட்டு பார்வையை அகற்ற முடியாமல் இமைக்காமல் பார்த்திருந்தான் விக்கிராந்த்!

   

பள்ளியின் வாயிலை தாண்டி வந்த ப்ரியா, சாலையை கடக்க போக்குவரத்தை கவனிக்க வலது புறம் திரும்பவும், அங்கே நின்றிருந்த விக்கிராந்த் அவளின் கண்ணில் பட்டான்!

   

அவள் பார்ப்பதற்காகவே காத்திருந்த விக்கிராந்த், சின்ன புன்னகையுடன், "ஹலோ," என்றான்.

   

"ஹலோ," என்று மறுமொழி சொன்னவளின் முகத்தில் ஆச்சர்யம் தோன்றி மறைந்தது.

   

"நிறைய தடவை ஃபோன் செய்தேன், பிசியா இருந்தீங்க போல, எடுக்கலை!"

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.