பக்கம் பார்த்து,
"அம்மா சொன்னாங்க விக்கிராந்த்! ரொம்ப சந்தோஷம். ப்ரியா நல்ல பொண்ணு! கங்கிராட்ஸ்," என்றாள்.
"தேங்க்ஸ் ஆன்ட்டி. இன்னும் கல்யாணம் எல்லாம் ஃபைனலைஸ் ஆகலை. நீங்க பாட்டுக்கு இப்படி சொல்லிட்டீங்க, அப்புறம் ப்ரியா தப்பா நினைச்சுக்கப் போறாங்க," என்றான் விக்கிராந்த்.
"ப்ரியா அப்படி எல்லாம் நினைக்க மாட்டா! ஆமாம் நீ என்ன இந்த பக்கம், சும்மா வந்தீயா?"
"ஆமாம் ஆன்ட்டி, கொஞ்சம் ஃப்ரீயா இருந்தேன்! சரி வீட்டுக்குப் போற வழியில தானே ஸ்கூல் இருக்குன்னு அப்படியே வந்தேன்..."
கே.கே.நகருக்கும் அண்ணா நகருக்கும் இருக்கும் தொலைவு ஜெயந்திக்கு தெரியாததா என்ன?
விஷயம் புரிந்ததால், மேலே தூண்டி துருவாமல்,
"ப்ரியா கிட்ட பேசிட்டு தான் வந்தேன். ஸ்டாஃப் ரூம் போயிட்டு வருவா. அஞ்சு நிமிஷத்தில வந்திருவா. நான் கிளம்புறேன்ப்பா," என்றாள் சின்ன புன்னகை மின்ன.
அந்த புன்னகைக்கான அர்த்தம் புரிந்ததால், "சரி ஆன்ட்டி! பை," என்றான் விக்கிராந்த் மெல்லிய சங்கோஜத்துடன்.
ஜெயந்தி நகர்ந்துச் செல்ல, ஸ்ரீ இப்போதும் அவனை கேள்வியாகப் பார்த்தபடி நின்றாள்.
“சாரி நாங்க தப்பா நினைச்சுப் பேசிட்டோம்,” என கோகிலா சொல்லவும்,
“இட்ஸ் ஓகே,” என்றான் விக்கிராந்த் இலகுவாக.
“உங்க பேரு விக்கிராந்தா??? அப்போ நீங்க வர்ஷாவோட அண்ணன் விக்கிராந்தா???” ஸ்ரீ அந்த கேள்வியை கேட்ட தோரணையில் இருந்தே அந்த கேள்விக்கு வேறு ஏதோ அர்த்தம்