“தேங்க்ஸ் ம்மா, தேங்க்ஸ் ப்பா!!!”
“இதே மாதிரி எப்போவும் நீ சந்தோஷமா இருந்தா சரி தான் தியாகு!”
❀✿❀✿❀✿
தியாகு பழைய நினைவுகளில் இருந்து விடுப்பட்டு கண்களை திறந்துப் பார்த்தான். என்ன மாதிரியான பெற்றோர் அவனுடைய அம்மாவும், அப்பாவும்!!!
அவனின் அம்மாவிடம் வேறு ஒரு பெண்ணை கண்டுபிடித்தால் சரி என்று அவன் சொன்ன போதும், அம்மா அப்படி வேறு ஒருத்தியை கண்டுப்பிடிக்க மாட்டார்கள் என்பது அவனுக்கே தெரியும்!
அந்த தேடல் எல்லாம் அம்மாவின் கண் துடைப்பு தான்!
ஒரு விதத்தில் பார்த்தால், அவனின் கீர்த்தியிடமும் அதே குணம் இருந்தது! கல்யாணப் பேச்சு தொடங்கியதும் எதிர்பார்த்ததுப் போலவே அவள் கத்த தான் செய்தாள்! அவளின் அம்மா, அப்பா, அண்ணன்கள், கீதா என அனைவரிடமும் அவள் கோபத்தை காட்டுவதை விஜய் மூலம் அறிந்தப் போ அவனுக்கு கவலையாக இருந்தது!
கிருத்திகாவிடம் நேரடியாக பேச விரும்பினான். ஆனால் அதற்கு முன் அவளின் அப்பாவிடம் அனுமதி பெற அவரை தேடிச் சென்றான்.
❀✿❀✿❀✿
“சாரி அங்கிள், வேலை நேரத்துல வந்து தொல்லை செய்துட்டேனா??” எனக் கேட்டுக் கொண்டே ரங்கராஜன் காண்பித்த நாற்காலியில் அமர்ந்தான் தியாகு.
“என்ன தியாகு இன்னும் இப்படி தொல்லைன்னு எல்லாம் பேசிட்டு இருக்கீங்க? என் ஒரே