தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 15 - சசிரேகா
போட்டியின் நான்காவது நாள்
ஞாயிற்று கிழமை காலை 5.30 மணிக்கு
வீட்டில் இருந்த அனைவரும் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்க ரிஷி வழக்கம் போல ஜாக்கிங் செல்வதாக அர்ஜூனிடம் சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே வந்தவன் வீட்டை சுற்றி முற்றி பார்த்தான். இன்னும் யாரும் எழுந்தபாடில்லை. ரிஷியும் ஒரு திருடனைப்போல வீட்டுக்குள் பதுங்கி பதுங்கி நந்தினியிருந்த அறைக்கு சென்றான். கதவு பூட்டாமல் சாத்தியிருந்ததால் அவன் மெதுவாக சத்தம் எழுப்பாமல் அந்த அறைக்குள் சென்றான்.
இருட்டு வேறு நைட் லாம்பின் மங்கிய விளக்கு வெளிச்சத்தில் அவன் நந்தினியை தேட ஆரம்பித்தான். முதல் பெட்டிற்கு அருகில் சென்றவன் விளக்கு வெளிச்சத்தில் மங்கலாக தெரியவும் மெதுவாக
”நந்தினி நந்தும்மா” என ஹஸ்கி வாய்சில் காதருகே கூப்பிடவும்
”நோ மிஸ்டர் இந்த டீல் எனக்கு கிடைச்சே ஆகனும் நான் 50 சதவீதம் ஷேர் இதுல இன்வெஸ்ட் பண்றேன் உங்களால எப்படி முடியாதுன்னு சொல்றீங்கன்னு நானும் பார்க்கறேன்” என சோனா தூக்க கலக்கத்தில் உளரவும் சட்டென ஒதுங்கியவன் தலையில் அடித்துக்கொண்டான்.
”பாவி மகளே சோனா தூக்கத்தில கூட பிசினஸ் டீல் ஷேர்ன்னே இருக்காளே இவளோட கல்யாணம் ஆகி குழந்தை பொறந்தா என்ன பேர் வைப்பா பொண்ணு பொறந்தா டீல்னும் பையன் பொறந்தா ஷேர்ன்னும் வைச்சித்தொலைவா சே இது இவள் பெட்டா இனிமே இந்த பக்கமே வரக்கூடாது. அடுத்த பெட்டுக்கு போகலாம்” என நினைத்தவன் நேராக அடுத்த பெட்டிற்கு சென்றான்
அங்கு சென்றவன் எதுவும் பேசாமல் மெல்ல தோளை தட்டினான் அந்த உருவம் மெல்ல அசைந்தது. இருந்தாலும் மெதுவாக இன்னும் 2 தட்டு தட்ட