அவளுக்கு ஒரே குதூகலமானது.
”தேங்ஸ் தாத்தா”
”இதில 100 மார்க்கு உன் சமையல் அப்புறம் 100 மார்க் உன்னோட புத்திசாலித்தனத்துக்கானது சரியா”
“புரியுது அங்கிள்”
“ஆனா மறந்துடாத நான் 700க்குதான் இப்ப 200 மார்க் போட்டேன் இன்னும் இந்த நாள் முடியலை முடியும் போது உனக்கு எவ்ளோ மார்க் வரும்னு தெரியாது”
“பரவாயில்லை தாத்தா இதுவே எனக்கு வெற்றிதான்”
“சரிம்மா போ எல்லாருக்கும் பரிமாறிட்டு சாப்பிடு போ” என சொல்ல அவளும் சந்தோஷமாக அனைவருக்கும் பரிமாறினாள்
அடுத்து வந்தனா வந்தாள். விறகடுப்பிலும் அவசரமாக செய்தபடியால் அந்த புகையின் நெடி இன்னும் அவள் செய்த டிஷ்ஷில் இருந்தது. விறகு எரிந்ததால் ஏற்பட்ட கருப்பு துகள்கள் சிறிது அவளின் மசாலாவில் இருக்கவும்
”என்னம்மா இது இப்படி செஞ்சிருக்க புகையோட நெடி அப்படியே இருக்கே நீ செஞ்சதும் மூடி போட்டு வைச்சிருக்கனும் இல்லைன்னா கொண்டாந்து வீட்டுக்குள்ள வைச்சிருக்கனும் ஏன் செய்யலை இப்ப பாரு புகையும் கருப்புத்துகள்களும் உன்னோட இந்த டிஷ்ஷை சாப்பிட விடாம பண்ணிடுச்சி”
“சாரி தாத்தா நான் சமைக்கற அவசரத்தில இதை கவனிக்கலை”
“இதை மட்டுமா கவனிக்கலை தோசைக்கு செய்ய வேண்டிய சட்னி எங்க”
“அய்யோ தாத்தா நான் மறந்துட்டேன்”