“எதுக்கு அத்தான்”
“எதுக்கா உனக்கு பூஸ்ட் கொடுக்கதான்”
”சீ போங்கத்தான்” என அவள் வெட்கப்படவும் அவளது வெட்கத்தில் மயங்கிய ரிஷியும் அவளை இழுத்து அணைக்கவும் பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டு பயந்த ரிஷி சட்டென நந்தினியை விட்டுவிட்டு எழுந்து வெளியே ஓடிவிட்டான். கட்டிலில் எழாமல் வாசலையே பார்த்து பயத்திலிருந்த நந்தினியை கண்ட வந்தனா
”ஓய் என்னாச்சி ஏன் வாசலையே பார்க்கற”
“இல்லை யாரோ போன மாதிரியிருந்திச்சி அதான்”
“அது உன் பிரமை போ போய் குளிச்சிட்டு வா” என சொல்லிவிட்டு மிச்சம் இருந்த 2 பெண்களையும் எழுப்பிவிட இம்முறை நந்தினி மீண்டும் படுத்துக்கொண்டாள். அவளின் இந்த செயலைக்கண்ட வந்தனாவிற்கு சந்தேகம் வர அவள் நந்தினியை எழுப்பினாள்
”ஏய் என்ன ரெடியாகலையா”
“10 மணிக்குதானே டிபன் செய்யனும் நான் லேட்டா வரேன் நீங்க போங்க” என சொல்ல அவளும் எதையோ நினைத்துக்கொண்டு வெளியே சென்றாள்.
சோனாவும் மிருதுளாவும் நந்தினியின் செயலைக்கண்டு திகைத்து அவர்கள் ரெடியாக ஆரம்பித்தார்கள். நந்தினி பொறுமையாக குளித்துவிட்டு வெளியே வந்தாள். ஹாலில் வந்தனா சோனா மிருதுளா 3 பேரும் எதையோ நினைத்து குழம்பிக்கொண்டிருக்க அவளிடம் வந்து நின்றாள். அவளைப்பார்த்த சோனா
”உனக்கு விசயம் தெரியுமா கிச்சன்ல இருந்த கேஸ் சிலிண்டர்கள் காலியாயிடுச்சாம். புக் பண்ணிட்டாங்க ஆனா வர்றதுக்கு லேட்டாகுமாம் சிலிண்டர் இல்லாம என்ன செய்றது” என