”ஆ இதோ வந்துட்டேன் சாதம் குழம்பு அய்யோ கூட்டு செய்யலையே அப்பளம் எங்க இருக்கு” என புலம்பவும் தலையில் அடித்துக்கொண்டான் ரிஷி
”சே இது வந்தனா அதான் கிட்ட போனாளே சமையல் நாத்தம் அடிக்குது. இதுல அப்பளம் எங்க இருக்குன்னு கேட்கறா பாரு பையன் பொறந்தா அப்பளம்னு பேர் வைச்சிடு விளங்கிடும்” என சொல்லிவிட்டு அடுத்த பெட்டுக்கு சென்றான்.
அதில் படுத்திருந்த உருவத்தையும் இதோ போல 2 தட்டு தட்ட
”ம் இருங்க பாட்டி எப்படியிருந்தாலும் ரிஷியை நான் என் கைக்குள்ள அடக்கிடுவேன் நீங்க ஏன் பயப்படறீங்க ரிஷியை நான் அடைஞ்சி அவனை நான் வேலைக்காரனாக்கி இந்த வீட்டையே சொந்தமாக்கி என்னை கூட்டிட்டு வந்த பாட்டி உங்களை வீட்டை விட்டே விரட்டுவேன்” என்றாள் மிருதுளா
ரிஷிக்கு சிரிப்பாக இருந்தது.
”என் பாட்டியை நீ விரட்டறியா என் தாத்தா 40 வருஷமா செஞ்சும் முடியலை உன் ஒருத்தியால முடியுமா அதையும் பார்க்கறேன் ஏண்டி என்னையா நீ வேலைக்காரனாக்க பார்க்கற இரு உன்னை ஒரு நாள் நான் வேலைக்காரியாவே மாத்திடறேன் என் பாட்டி மாதிரி வந்து சேர்ந்துருக்கு பாரு கொள்ளிவாய் பிசாசு” என மனதுக்குள் திட்டிக்கொண்டே அடுத்த பெட்டிற்கு சென்றான்.
”இது கண்டிப்பா நம்ம ஆளுதான் டவுட் இல்லை பேசாம போய் படுத்துட வேண்டியதுதான்” என நினைத்தவன் நந்தினி இருந்த பெட்டிற்கு வந்தவன் அவள் பக்கத்தில் கிடைத்த இடத்தில் படுத்துக்கொண்டு போர்வையை நன்றாக முடியவன் மெதுவாக அவள் காதோரம் பேசலானான்
”நந்தினி நந்தினி” என அவன் ஹஸ்கி வாய்சில் நந்தினியின் காதுக்குள் கத்த அவளுக்கு தூக்கத்திலும் தன்னை மறந்து சிரித்தாள்.