கேட்க
”அதான் ஓவன் இருக்கே அதுல சமைக்கலாம்”
”உனக்கு அதுல சமைக்க தெரியுமா” என சோனா கேட்க
“தெரியாது” என்றாள் நந்தினி
“அப்புறம் என்ன செய்யப்போற”
“தெரியலை இன்னும் தாத்தா வரலையா”
“வரலை அவருக்காகதான் நாங்க வெயிட் பண்றோம்” என சோனா சொல்லவும் தாத்தா வந்தார்
”என்னம்மா 4 பேரும் ஒண்ணாயிருக்கீங்க என்ன விசயம் சமைக்க போகலையா”
என தாத்தா ஒன்றும் தெரியாத அப்பாவி போல் கேட்க வந்தனா அலறினாள்
”தாத்தா சிலிண்டர்கள் தீர்ந்து போச்சி தாத்தா எப்படி சமைக்கறது காபி போடறது”
“ம் தெரியும்மா சுசித்ரா சொன்னா நான் மறந்துட்டேன் புக் பண்ணிட்டாங்களா இல்லையா”
“சுசித்ரா ஆன்ட்டி புக் பண்ணிட்டாங்களாம் தாத்தா ஆனா சிலிண்டர் வர லேட்டாகுமாம்” என்றாள் சோனா
”அதனால என்னம்மா சிலிண்டர் வர்ற வரக்கும் தோட்டத்தில விறகடுப்பு இருக்கும் அதுல சமைங்க உங்க 4 பேருக்காகவும் தான் அதை செய்திருக்கேன்” என சொல்ல சோனாவிற்கு வியப்பாக இருந்தது
”விறகடுப்பா தாத்தா நான் அதையெல்லாம் பார்த்ததில்லையே”