மணி ஒன்றானது.
அனைவரும் சாப்பிட அமர்ந்துவிட தாத்தா முதலில் அந்த 4 பெண்களிடமும்
”நைட் டின்னர் நீங்க செய்ய வேணாம் ஓட்டல்ல இருந்து ஆர்டர் பண்ணி வரவழைச்சிடறேன் விறகடுப்பில நைட் இருட்டுல செய்ய முடியாத காரணத்தால இந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைச்சிருக்கு ஹாப்பியா இருங்க” என சொல்லிவிட்டு வந்தனாவை பார்த்தார்
”வாம்மா வந்தனா வா என்ன செஞ்சிருக்க” என கேட்க அவளும் தான் செய்த சமையலை பரிமாறினாள்
”ம் உனக்கு குக்கர்ல சமைக்க வராதா”
“இல்லை நான் குக்கர்ல சமைச்சி பழக்கமில்ல தாத்தா இதான் முதல் முறை”
“அதான் உன் சமையல் இப்படியிருக்கு பாரு நீ புலாவ் செய்யதான் ஆரம்பிச்ச அது கடைசியில பாயாசம் மாதிரியாயிடுச்சி” என சொல்ல
”சாரி தாத்தா”
“இதை யாருக்கும் பரிமாற வேணாம் எடுத்துட்டு போயிடு அடுத்து மிருதுளா வாம்மா” என அழைக்க அவளும் தான் செய்ததை பரிமாறினாள்
”ம் நல்லாயிருக்கு. உப்புதான் குறைவா இருக்கு”
“அது ஓவன்ல வைச்சதால அளவு தெரியலை தாத்தா”
”பரவாயில்லை ஆனாலும் ரொம்ப நேரம் ஓவன்ல வெச்சிட்ட போல பாரு கொஞ்சம் அடிப்பிடிச்சிருக்கு”