(Reading time: 25 - 50 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

தன் பக்கத்தில் இருந்த சுசித்ராவிடம்  உணவை பற்றி கேள்வி கேட்க அதற்கு அவரும் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். அதைப்பார்த்த வந்தனாவும் வேண்டுமென்றே சுசித்ராவிடமிருந்து நந்தினியை பிரித்து கேள்விகள் கேட்கவும் நந்தினி உடனே புரிந்துக்கொண்டு சீக்கிரமாகவே சாப்பிட்டு விட்டு சோனாவிடம் வந்தாள்

   

”சோனா”

   

“சொல்லு நந்தினி என்னால உனக்கு ஏதாவது உதவியாகனுமா”

   

“ஆமாம் பால் சூடு பண்ணனும் ஓவன்ல எப்படி சூடு பண்றதுன்னு கொஞ்சம் சொல்றியா”

   

“ஆனா சுசித்ரா ஆன்ட்டிதானே உதவி செய்யனும்னு தாத்தா சொன்னாரு”

   

“இப்ப மணி 10.15. போட்டி நாள் முடிஞ்சிடுச்சி அதான் அதுவும் இல்லாம வந்தனா சுசித்ரா அத்தையிடம் விடாம பேசிக்கிட்டு இருக்கா மிருதுளாவும் தூங்க போயிட்டா அதான் உன்கிட்ட வந்தேன்.”

   

“ஓ சரி சரி வா சொல்லித்தரேன்” என சொல்லி அவளுக்கு ஓவனில் பால் சூடு பண்ண உதவினாள். அதற்காக நந்தினியும் அவளுக்கு பாதாம் பால் தர அவளும் குடித்துவிட்டு உறங்க சென்றாள்.

   

மற்ற அனைவருக்கும் பாதாம் பால் தயாரித்தவள் அதை மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு யாருக்கும் தெரியாமல் ரிஷிக்காக நட்ஸ்பால் தயாரித்து அதை எடுத்துக்கொண்டு ஸ்டெடி ரூம் என சொல்லப்படும் பூஜையறைக்கு பக்கத்து அறைக்கு சென்றாள். அவளுக்காக காத்திருந்த ரிஷி நந்தினி வரவும் அவள் தந்த பாலை குடித்துவிட்டு அவளுடன் முடிந்தவரை சரசமாடிக்கொண்டிருந்தான்.

   

”நந்தினி”

   

”அத்தான்”

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.