“ஆமாம்”
“ஏன் தாத்தா என்ன விசயம்”
“சொல்டா”
“இருக்கு நிறையதான்”
”சரி கொண்டா போ” என சொல்ல அவனும் யோசனையுடன் தன் அறைக்கு சென்றவன் தன் வாலட்டை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வர அங்கு தாத்தாவும் சுசித்ராவும் எதையோ பேசி சிரித்துக்கொண்டிருப்பதைக்கண்டு சந்தேகமடைந்தவன் நேராக சித்தியிடம் வந்தான்
”என்ன சித்தி என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க எனக்கும் சொன்னா நானும் சந்தோஷப்படுவேனே”
“இன்னும் கொஞ்ச நேரத்தில நீயும் பார்க்கத்தானே போற பொறுமையா இரு” என சொல்ல தாத்தா அவனிடம்
”ஆமா பணம் கொண்டாந்துட்டியா”
“இதோ”
“எவ்ளோ இருக்கோ அதுல 4 ஆயிரம் மட்டும் எடுத்துக்கொடு. 500 ரூபாய் நோட்டாவே இருந்தா போதும்” என சொல்ல அவனும் தந்தான்
”ஏன் தாத்தா உங்ககிட்டயே பணம் இருக்கறப்ப எதுக்கு என்கிட்ட கேட்கறீங்க”
”சொல்றேன்” என சொல்லிவிட்டு சுசித்ராவை பார்த்து விசித்ரமாக சிரித்தார் தாத்தா. அதைப்பார்த்த ரிஷி திருதிருவென விழித்தான்.