“சரிங்கத்தான் டைம் ஆயிடுச்சி யாராவது வந்துட போறாங்க நான் கிளம்பறேன்”
”இருடி போகாத”
“அத்தான் விடுங்க என்னை நான் எங்க போயிட போறேன் இங்கதான் இருக்கப்போறேன்”
”என்னவோ தெரியலை உன்னை விட மனசே வரலை” என அவளை இழுத்து அணைத்தவன் அவளுக்கு மூச்சு முட்ட முத்தங்கள் தந்து வழியனுப்பி வைத்தான்.
போட்டியின் 5வது நாள்
விடிந்தது.
காலையில் எழுந்ததும் அவசரமாக தாத்தாவை காண ஓடி வந்தான் ரிஷி.
”தாத்தா”
“என்னடா இது ஜாக்கிங் போகாம இங்க இருக்க”
“நான் போறேன் ஆமா மார்க் போட்டீங்களா”
“இனிமேதான் போடனும்”
“தாத்தா என்ன நீங்க இப்படி பொறுப்பில்லாம இருக்கீங்க”
“டேய் அடிவாங்காதடா பேசாம போ நான் யோசிச்சி மார்க் போடனும்”
“முடியாது நானும் இருக்கேன் என் கண்ணு முன்னாடியே போடுங்க”
”முடியாது நீ நந்தினிக்காக என்கூட சண்டை போடுவ”