தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
72. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சஞ்சீவ் முன் தின இரவில் நடந்துக் கொண்டதுப் போல முகத்தில் அடிக்கும் பதில் சொல்லலாமா என யோசித்த இந்துவிற்கு சில மாதங்களுக்கு முன் காஃபி ஷாப்பில் அவர்கள் நடுவே நடந்த சந்திப்பு நினைவுக்கு வந்தது!
அன்று கண்கள் மின்ன வந்தவன், அவள் சொன்ன ‘டோன்ட் பீ ஸில்லி’யைக் கேட்டு முகம் மாறிய விதம் இப்போது அவளின் கண் முன் வந்து நின்றது! அந்த சந்திப்புக்கு பின்பும் கூட அவன் அவளுடைய சஞ்சீவாகவே தானே இருந்தான்! அன்று அவள் அறைந்தப் பிறகு...
எண்ணங்களை ப்ரேக் போட்டு நிறுத்தினாள் இந்து!
அவள் அறைந்ததற்கு, அவன் கதவை அறைந்து மூடினான் என்று வைத்துக் கொள்ளலாம். இருவருடைய கணக்கும் செட்டில் ஆகி விட்டது!
மனம் லேசாக, "என்ன? சொல்லுங்க," என இயல்பாகவே வினவினாள் இந்து.
அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு பேசினான் சஞ்சீவ்!
"என்னோட கன்டிஷன்ஸ்ல ஒரு சின்ன சேன்ஜ்... அத்தை விஷயத்தில..."
அவன் ‘அத்தை’ என்றதும் இந்துவின் புருவங்கள் மேலே சென்றன! அவளின் முகம் மாறிய விதத்தை கவனித்த சஞ்சீவ்,
"உன் அம்மாவை தான் சொல்றேன்.... அவங்க பாவம்... அந்த ஒரு கன்டிஷன் மட்டும் விட்டுருவோம்... ஃபாலோ செய்ய வேண்டாம்," என்றான்.
இந்துவிற்குள் சட்டென்று சுனாமியாக மகிழ்ச்சி குமிழிட்டது! அந்த சந்தோஷத்தில் அவளுக்கு சில வினாடிகள் ஒன்றுமே புரியவில்லை... அவளுக்கும் சஞ்சீவுக்கும் நடுவே இந்த டிஷூம்-டிஷூம் மட்டும் இல்லாதிருந்திருந்தால், அவளே அவனை கட்டி அணைத்து முத்தமிட்டிருந்திருப்பாள்!