தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 20 - சசிரேகா
ஞாயிற்றுக்கிழமையன்று வந்தனாவிற்கு கையில் ஏற்பட்ட காயம் குணமாகும் வரை தாத்தா அவளை சமைக்க வேண்டாம் என்றும் அதற்காக அவளிடம் ஒரு வாய்ப்பை பெற்ற காரணத்தால் வந்தனாவும் வேண்டுமென்றே கையில் காயம் ஆறிய பின்பும் நந்தினியை வேலைவாங்கும் எண்ணத்தில் சமையல் செய்யாமல் இருந்தாள்.
நந்தினி அதைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் காலையில் அனைவருக்கும் காபி கொடுப்பதிலிருந்து டிபன் லன்ச் மாலை டிபன் மற்றும் நைட் டின்னர் இறுதியில் நட்ஸ்பால் தருவது வரை அனைத்து வேலைகளையும் சந்தோஷமாக இன்முகத்துடன் செய்தாள்.
வந்தனா தன் கை காயம் ஆறவில்லை என்றே நடித்துக்கொண்டிருந்தாள். அதனால் தாத்தாவும் மார்க் எதுவும் போடாமல் விட்டார்.
தொடர்ந்த 5 நாட்களாக நந்தினி மட்டுமே சமையல் செய்துக்கொண்டிருந்தாள்.
போட்டியில்லாத காரணத்தால் நந்தினியும் ஏதோ தன் வீட்டில் தான் இருப்பதைப்போல சந்தோஷமாக இருந்தாள். அவ்வப்போது ரிஷி அவளுக்கு அதிகமாகவே பூஸ்ட் தர அதில் அவள் உலகத்தையே மறந்தாள். ரிஷியும் அவளை தன் கைப்பிடிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக இழுத்து ஒரேடியாக இழுத்துக்கொண்டான்.
போட்டியின் 17வது நாள்
விடிந்தது.
காலையில் எழுந்த நந்தினி ரெடியாகி கீழே வந்து கிச்சனுக்குள் நுழைய அங்கு ரெடியாக காத்திருந்த ரிஷி அவளை ஆசையாக அணைத்துக்கொண்டான்
”அத்தான்” என்றாள் ஆசையாக”
“ம்“