”டேய் இது அநியாயம்டா நடக்கறது போட்டி ஆனா போட்டி போலவா இங்க நடக்குது”
“பரவாயில்லை தாத்தா எப்படியிருந்தாலும் என் ஆளுதான் ஜெயிக்கும்”
“வந்தனா இருக்கறத மறந்துட்டியா”
“அவள் ஒரு வேஷக்காரி தாத்தா கையில அடிபட்டிருக்குன்னு சும்மா சீன் போடறா. எப்பவோ அந்த காயம் ஆறிப்போயிருக்கும். ஏற்கனவே அவளுக்கு 3 வாய்ப்புகளும் போயிடுச்சி. இனிமே அவள் செய்றது பலிக்காது நீங்க சொல்ற கஷ்டமான வேலையை அவள் செய்துதான் ஆகனும்”
“கட்டாயம் அவள் செய்யனும் ஆனா காயம் ஆறலைன்னுதானே நேத்து கூட சொன்னா”
”இங்க பாருங்க தாத்தா அவள் நடிக்கறா வேணும்னே எல்லா வேலையும் நந்தினி மேல போடறா இப்படியே நாட்களையும் கடத்தறா இப்பவே பாருங்க 17 நாள் ஆச்சி இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு அவள் ஏதோ திட்டம் போட்டு இப்படியெல்லாம் நடந்துக்கறா”
“அது மட்டும் உண்மைன்னா நானே அவளை விரட்டிடுவேன்”
“அவளை விரட்ட நீங்க தர்ற போட்டியே போதும் ஆமாம் தாத்தா அவளுக்கு கையிலதான் அடிப்பட்டிருக்கு கையில செய்ய முடியாத வேலையா பார்த்து கொடுங்களேன் அதை போட்டியாக்கி மார்க் போடுங்களேன்” என சொல்ல தாத்தாவும்
”என்ன தர்றதுன்னு தெரியலைடா”
“அதான் இவ்ளோ பெரிய வீடு இருக்கே. வேலைக்காரங்க இருக்காங்க 2 பொண்ணுங்களுக்கும் ஆளுக்கு ஒண்ணோ ரெண்டோ வேலைக்காரனை போடுங்க. இந்த ஹால் இருக்குல்ல இதை அழகு பண்ண சொல்லுங்க யார் அழகா செய்றாங்களோ அவங்களுக்கு மார்க் போடுங்க இந்த வீடுதான் இம்புட்டு பெரிசா இருக்கே வெளிய தோட்டம் இருக்கு தாராளமா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமா அலங்காரம் பண்ணச் சொல்லி மார்க் போடுங்களேன் வீடும் சுத்தமாகி புதுசா அலங்கரிச்ச மாதிரியும் இருக்கும் போட்டியும் நடந்த மாதிரி இருக்கும்”