(Reading time: 22 - 43 minutes)
Pennennum ponnazhage
Pennennum ponnazhage

தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே  - 02 - சசிரேகா

  

நகை கடை வரவும் புல்லட் நின்றது, பூங்கொடியும் இறங்கிக் கொள்ள மூர்த்தியோ அவளிடம் தங்கத்தின் விலையை பற்றி விசாரித்து தெரிந்துக் கொண்டார்

   

”என்ன மாமா திடீர்ன்னு தங்கத்தோட விலையை பத்தி விசாரிக்கறீங்க, அத்தைக்கு நகை வாங்கப் போறீங்களா”

   

”அவளுக்கெதுக்கு நகை, இருக்கற நகையே போட்டுக்காம லாக்கர்ல தூங்குது”

   

”பின்ன யாருக்கு நகை வாங்கப் போறீங்க”

   

”கல்யாணத்துக்குதான்”

   

”யாரோட கல்யாணத்துக்கு” என அவள் அதிர்ச்சியில் அலற

   

”வேற யாருக்கு கருணாவுக்குதான்“

   

”ஓ அவருக்கா” என அமைதியானாள்

   

”பொண்ணு தேடிக்கிட்டு இருக்கோம்”

   

”இன்னுமா கிடைக்கலை”

   

”நிறைய வருது கருணாவுக்குதான் எதுவும் மனசுக்கு பிடிக்கலையாம்”

   

”ஏனாம்”

   

”என்னவோ அவன் மனசுல யார் இருக்காங்களோ என்னவோ அதையும் சொல்லித் தொலைக்க மாட்டேங்கறான்” என சொல்ல அவளுக்கு சங்கடமாகிப் போனது.

   

”சரிங்க மாமா எனக்கு வேலையிருக்கு நான் போறேன்” என சொல்லிவிட்டு அவள் கடைக்குள் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.