என்று அவளே அசந்துவிட்டாள்.
பையில் இருந்த இனிப்பை குழந்தைகளுக்கு தந்தான் சேது
காய்கறி மளிகையை ராஜலட்சுமி எடுத்துக் கொண்டாள், கட்டப்பையை தந்தை எடுத்துக் கொண்டார், அனைத்தும் அவளுக்காகவே வைத்திருந்தான் ஈஸ்வரன் ஆனால் அது ஒன்று கூட அவள் கையில் கிடைக்கவில்லை. பெருமூச்சு விட்டாள்.
வீட்டிற்குள் சென்று அனைவரும் நாளைய திருமண நாள் பற்றி கலகலவென பேசிக் கொண்டிருக்க சத்தமில்லாமல் சாப்பிட்டு முடித்து தன் அறைக்கு திரும்பி படுக்கையில் படுத்தாள் பூங்கொடி.
கண்கள் மூடினாள் ஈஸ்வரன் தெரிந்தான் தானாக அவளின் கன்னம் வெட்கத்தில் சிவந்தது இதழில் புன்னகை மலர்ந்தது.
”நாளைக்கு அண்ணாவுக்கு கல்யாணம், அது எனக்கே தெரியலை ஆனா உனக்கு தெரிஞ்சிருக்கு எப்படி ஓஓ நீதானே அண்ணாவுக்கும் அண்ணிக்கும் திருட்டுத்தனமா காதல் கல்யாணம் செய்து வைச்சது, மறந்தே போயிட்டேன் பாரு நீ மட்டும் அன்னிக்கு அவங்களுக்கு கல்யாணம் செய்து வைக்காம இருந்திருந்தா, இந்நேரம் நம்ம இரண்டு குடும்பமும் பிரிஞ்சிருக்காது நாமளும் பிரிஞ்சிருக்க மாட்டோம், அவசரப்பட்டியே அத்தான்” என நினைத்து துக்கத்துடன் உறங்கலானாள்.
காலதாமதமாக வீட்டிற்கு வந்த ஈஸ்வரனை சந்தேகமாக பார்த்தனர் கருணாவும் சத்தியாவும்.
”என்ன” என ஈஸ்வரன் கேட்க
”ஏன் இவ்ளோ லேட்டு”
”ப்ச் ஒரு முக்கியமான ஆள் வர லேட்டாயிடுச்சி அதான்” என சொல்லி சாப்பிட அமர கூடவே அவர்களும் அமர்ந்தார்கள் சுலோச்சனா அனைவருக்கும் உணவு பரிமாறினார். மூர்த்தியோ