(Reading time: 22 - 43 minutes)
Pennennum ponnazhage
Pennennum ponnazhage

”ஒண்ணும் இல்லாமயா அந்த வேகமா போன”

   

”ப்ச் வீட்ல போய் பேசிக்கலாம் இங்க எதுக்கு” என சொன்னவன் கடையை ஏறக்கட்டத் தொடங்க அவர்களும் தங்கள் கடையை ஏற கட்டச் சென்றார்கள்.

   

ஒன்பது மணியானது. ஈஸ்வரன் காலையில் பூங்கொடிக்காக எடுத்து வைத்த புடவையை கையில் எடுத்துக் கொண்டு கடையை சாத்தி பூட்டிவிட்டு பக்கத்து கடைக்கு வந்தான், அதற்குள் இனிப்பு கடையும் ஏறகட்டியபடி இருக்க அவனோ சட்டென ஒரு குலாப் ஜாமுன் பாக்ஸ் அவனது அண்ணன் பார்ப்பதற்கு முன் எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டே அடுத்த கடைக்குச் சென்றான், அங்கு மளிகை ஒரு பக்கம், காய்கறி ஒரு பக்கம் இருக்க, கடை பையனும் சத்தியாவும் இணைந்து அதை ஏறக்கட்ட உதவி செய்கிறேன் என ஈஸ்வரனும் கடையை ஏறகட்டியபடியே சில காய்களை மறைத்து வைத்தான், சில மளிகை பொருட்களை ஒளித்து வைத்தான், அதுகூட அறியாமல் மற்றவர்கள் இருக்க அவர்கள் பார்க்காத போது தான் ஒளித்து வைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு தனது புல்லட்டிடம் சென்று மறைத்து வைத்தான்

   

அண்ணன்கள் இருவரும் கடையை மூடிவிட்டு அவர்களது பைக்கில் ஏறிக்கொண்டு

   

”என்னடா கிளம்பலையா” என கேட்க

   

”நீங்க போங்க நான் வரேன்”

   

”யாராவது வர்றாங்களா என்ன” என கருணா கேட்க அதற்கு சத்தியாவோ

   

”இந்நேரம் பூங்கொடியும் வீட்டுக்கு போயிருக்குமே” என சொல்ல அதற்கு ஈஸ்வரனோ

   

”யார் போனா எனக்கென்ன, நான் வேற ஒரு ஆளுக்காக காத்திருக்கேன் நீங்க கிளம்புங்க” என சொல்ல அதில் அவர்களும் அங்கிருந்து சென்றார்கள். 

   

ஈஸ்வரனோ கைகடிகாரத்தைப் பார்த்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.