(Reading time: 22 - 43 minutes)
Pennennum ponnazhage
Pennennum ponnazhage

   

”டேய் இருடா இதுக்கு என்ன பதில்”

   

”அதையெல்லாம் நம்பாதம்மா” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட சுலோவோ தன் கணவரிடம்

   

”என்னங்க இவன் இப்படி சொல்லிட்டுப் போறான் இப்ப என்னங்க செய்றது”

   

”எதுக்கும் நாலஞ்சு ஜோசியரை போய் பார்த்துட்டு அப்புறம் ஒரு முடிவுக்கு வரலாம்“

   

”சாமியார் சொல்றது உண்மைங்க”

   

”சரி பார்த்துக்கலாம் நம்ம பையன் மேல சந்தேகப்படலாமா, ஒருவேளை அது தப்பா இருந்தா என்னாகும், அவன் நம்மளை பத்தி தப்பா நினைக்க மாட்டானா நீ தேவையில்லாம கவலைப்பட்டு வீணா பிரச்சனையை இழுத்துவிடாத, பேசாம இரு இந்த விசயத்தை நான் பார்த்துக்கிறேன்” என மூர்த்தி சொல்ல சுலோ சற்று அமைதியானார்.

   

மறுபக்கம் துணிக்கடைக்கு வந்த ஈஸ்வரனுக்கு இருப்பு கொள்ளவில்லை, பதட்டமாக இருந்தான். நேரம் ஓடிக் கொண்டிருந்தது அதுகூட அறியாமல் தவித்தபடி இருந்தான். அவனைக் காண கருணாவும் சத்தியாவும் வந்தார்கள்

   

”ஈஸ்வரா மணி 9 ஆக போகுது, இன்னுமா கடையை சாத்தலை” என விசாரிக்க அப்போதுதான் இயல்புக்கு வந்தான் ஈஸ்வரன்

   

”ஓ நேரமாயிடுச்சா இதோ இப்பவே கடையை மூடறேன்” என சொல்ல அவர்களோ

   

”அவசர அவசரமாக வீட்டுக்குப் போனியே என்ன விசயம்”

   

”ஒண்ணும் இல்லை”

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.