”என்னது மணி ஒன்பதரைன்னு காட்டுது இன்னும் பூங்கொடி வரலையே, என்னாச்சி அவளுக்கு போய் பார்க்கலாமா வேணாம் போனா திட்டுவா இல்லைன்னா அடிப்பா இங்கிருந்தே காத்திருந்து பார்க்கலாம், எப்படியும் இந்த வழியாதானே போவா” என அவன் நினைக்கும் போதே தனது ஸ்கூட்டியை தள்ளிக் கொண்டு நடந்து வந்தாள் பூங்கொடி அதைக்கண்டுக் கொண்டான் ஈஸ்வரன்
”வர்றதை பாரு, இந்நேரத்துக்கு ஒருத்தன் காத்திருப்பானேங்கற எண்ணம் கூட இல்லாம ஓ வண்டி ரிப்பேரா, வழியில எத்தனை மெக்கானிக் கடை இருக்கு எதுக்கு நடந்தே வர்றா ஒருவேளை காசு இல்லை போல, இப்ப என்ன செய்யலாம் அவளா கூப்பிட்டா போகலாம் நாமளா போனா அசிங்கப்படுத்துவா” என நினைத்து காற்று வாங்கிக் கொண்டிருந்தான்.
பூங்கொடியோ நகைகடையில் இருந்து தனது வண்டியை தள்ளிக் கொண்டே நடந்து வந்தாள் வழியில் 2 மெக்கானிக் கடை இருந்தும் பணம் இல்லாத காரணத்தால் வீடு வரை இப்படியே செல்வோம் என வீட்டிற்கு தகவல் அளித்துவிட்டு வண்டியை தள்ளியபடி சோர்வாக வந்தவள் ஈஸ்வரன் இருப்பதைக்கண்டு வியந்தாள் அந்நேரத்தில் அந்த தெருவே அடங்கிவிட்டது.
”இந்நேரம் கூட வீடு போய் சேராம எப்படி நிக்கறான் பாரு, விவஸ்தை கெட்ட ஜென்மம்” என அவன் காதுபட திட்டியவள் தனது வண்டியை நிப்பாட்டி ரிப்பேரான வண்டியை ஸ்டராட் செய்வது போல பாசாங்கு செய்து அது மக்கர் செய்ய செய்ய அவள் சோர்ந்துப் போய் அக்கம் பக்கம் பார்வையிட்டாள்.
அவள் திட்டியது காதில் விழுந்தும் அதைப்பற்றி சிறிதும் நினையாமல் வெட்கம் மானத்தை விடுத்து அவளை நாடி வந்தான் ஈஸ்வரன்
அவன் வருவதைக்கண்டு ஒரு பக்கம் அவளுக்கு நிம்மதியாக இருந்தாலும் மறுபக்கம் வேண்டுமென்றே அவனை திட்டலானாள்
”ஏய் வராத வந்த அடி வாங்குவ“ என சொன்னாளே தவிர அடிப்பதற்கு எந்த முயற்சியும் செய்ய வில்லை, அவனே அந்த ஸ்கூட்டியை சோதனையிட்டான் எங்கு என்ன பிரச்சனை என