(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

அழைத்த தாத்தா வந்தனா குறித்து அர்ஜூன் சொன்ன கருத்துக்களை சொல்லவும்

   

”அய்யோ மாமா என்ன இது இப்படி சொல்றீங்க”

   

“ஆமாம்மா வந்தனாவோட கவனம் இப்ப உன் பையன்கள் மேல தாவியிருக்கு உண்மையா பொய்யான்னு நீ விசாரிச்சி பாரு. உண்மைன்னா சீக்கிரமா அவனுங்களுக்கு கல்யாண ஏற்பாடுகள் செய்யனும். அதுக்கு முன்னாடி நீ என்ன பண்ற டிபன் சாப்பிடறப்ப நான் சொல்ற மாதிரி சொல்லனும் செய்வியா”

   

“கண்டிப்பா செய்றேன் மாமா”

   

“சரி எல்லாரையும் கூட்டிட்டு வா சாப்பிடலாம்” என சொல்லவும் அவர் சென்றுவிட தாத்தா ரிஷியை பார்த்தார்

   

”ரிஷி டிபன் சாப்பிட்டு முடிச்சதும் உனக்கு ஒரு வேலை தரேன் நேராக ஜோசியர் கிட்ட பாட்டியை கூட்டிட்டு போ உனக்கு உன் தம்பிங்க 2 பேருக்கும் அதோடு அர்ஜூனுக்கும் கல்யாணம் பண்ணனும் முதல்ல கல்யாண நாளை முடிவு பண்ணிட்டு வாங்க. அதுக்கப்புறம் பொண்ணுங்களை தேடிப்பிடிக்கலாம்”

   

“முதல்ல பொண்ணுங்களை தேடிடலாமே தாத்தா”

   

“நாள் கிடைக்கறதுதான் இங்க கஷ்டம் பொண்ணுங்களுக்கென்ன கிடைச்சிடுவாங்க. இப்பவே மாசம் முடியப்போகுது. அடுத்த மாசத்தில நல்ல முகூர்த்த நாளா பார்த்து 4, 5 நாள் குறிச்சிட்டு வாங்க ஒண்ணு போனாலும் அடுத்த முகூர்த்தத்தில கல்யாணத்தை முடிச்சிடலாம். 

   

அப்படியே கல்யாண புரோக்கர் கிட்டயும் உன் சித்தப்பா, அப்பாகிட்டயும் கருணாவுக்கும் தினாவுக்கும் பொண்ணு தேட சொல்லு அதுவும் நான் சொன்னதா சொல்லு இந்த 15 நாளுக்குள்ள தேடிபிடிக்க சொல்லு இப்பவே கிளம்பு இந்த வேலைகளை நீ முடிக்கற அது உன் பொறுப்பு மீறினா வீட்டை விட்டு விரட்டிடுவேன்”

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.