”அர்ஜூன் டைம் ஆயிடுச்சி நாங்க கிளம்பறோம் உன் தங்கச்சியை நான் பத்திரமா கூட்டிட்டு வரேன் என் குடும்பத்தை நீ பத்திரமா பார்த்துக்கடா யாரும் இல்லை எல்லாம் வயசானவங்க”
“சரிண்ணா நான் பார்த்துக்கறேன்” என அர்ஜூன் சொல்லவும் ரிஷி தன் தாத்தாவிடம்
”போற நேரத்தில கூட அர்ஜூனை என்கூட சேர்த்து வைக்க பேசறீங்களா” என்றான் ரிஷி
“இல்லைடா அவன் தொல்லை தாங்க முடியலை அதான்”
“அதுக்கு என் கூட அனுப்பிவைக்கனுமா நான் வாழவேணாமா ஒழுங்கா அர்ஜூனை உங்க கூடவே வெச்சிக்குங்க நான் திரும்ப வர்றவரைக்கும் அவனை லண்டனுக்கு அனுப்பிடாதீங்க நான் அங்க போறது ஹனிமூனுக்காகதான் பாசமலர் பாகம் 2வது படத்தை எடுக்கறதுக்காக இல்லை நான் போயிட்டு வரேன்” என சொல்லிவிட்டு நந்தினியை இழுத்துக்கொண்டு போர்டிங் செங்கிங்குக்காக சென்றவன் பாஸ்போர்ட் பேப்பர்ஸ் எல்லாம் காட்டி ஒரு வழியாக அனைவருக்கும் டாடா சொல்லிவிட்டு நந்தினியின் கையை விடாமல் சந்தோஷமாக ஹனிமூன் கொண்டாட லண்டன் பிளைட் ஏறினான் ரிஷிகேசன்.
எனது கதையை தொடர்ந்து வாராவாரம் படித்து ஆதரவளித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் இக்கதையை பிரசுரம் செய்த சில்ஸி குழுமத்திற்கும் எனது கோடான கோடி நன்றிகள்
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
-சுபம்-