வைக்கனும்டா புரியுதா”
“நல்லாவே புரியுது தாத்தா” என சந்தோஷமாக சொல்லியவன் நந்தினியை பார்க்க அவளோ ரிஷியை ஏக்கமாக பார்த்தாள். ரிஷியோ போகாத போகாத என சைகை செய்துக்கொண்டிருக்க அர்ஜூன் நேராக நந்தினியிடம் வந்து அவளிடம்
”நந்தினி வா போலாம்” என்றான் அர்ஜூன்
”அண்ணா” என பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அழைக்க
”என்னம்மா வா அதான் நீ போட்டியில ஜெயிட்டல்ல அப்புறம் என்ன”
“அண்ணா ஆனா அத்தான்” என்று இழுக்க
“அண்ணாக்கு நீ வேணும்னா அவரே வாய் திறந்து பேசட்டும் இப்ப கூட நீதான் உருகுற கெஞ்சற அங்கிருந்து ஒண்ணும் வரலை” என சொல்ல ரிஷியே அர்ஜூனிடம் வந்தான்
”டேய் அவளை விட்டுட்டு போடா அதான் அவள் எனக்குன்னு ஆயிட்டாளே அப்புறம் என்ன நான் பார்த்துக்கிறேன்”
“அண்ணா வேணாம் அவள் போட்டியில இருந்தப்பவும் நீங்க விடலை இப்ப வேற அவள் ஜெயிச்சிட்டா நீங்க சும்மாவே விடமாட்டீங்க வேணாம் அவள் பத்திரமா ஹாஸ்டல்ல இருக்கட்டும்”
“நான் எதுவும் செய்ய மாட்டேன்டா”
“அப்படியா எங்க சத்தியம் பண்ணுங்க இதுக்கு முன்னாடி நீங்க ஒண்ணுமே பண்ணலைன்னு”
”அது சும்மா அவளை உற்சாகப்படுத்தி தெம்பு கொடுக்க செஞ்சது அதான் இப்ப போட்டியில ஜெயிச்சிட்டாளே அப்புறம் என்ன”