(Reading time: 7 - 13 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

ஃபவுன்டேஷன் ஸ்ட்ராங்காக இருந்தால் அந்த கட்டிடம், மழை, புயல் என அனைத்தையும் தாங்கும்...

   

அதே போல அன்பும் புரிதலும் இருந்தால் அந்த திருமண வாழ்வு கஷ்ட நஷ்டங்களை எதிர்க்கொண்டு நிலையாக இருக்கும்...

   

கிருத்திகாவை விரும்பாமல் தியாகு அவளை திருமணம் செய்துக் கொண்டிருந்தால் அவர்களின் திருமணம் ஒரு வாரம் கூட நிலைத்திருக்குமோ என்னவோ...

   

ஆனால் அவளை விரும்பியது மட்டுமில்லாமல், அவளை புரிந்துக் கொள்ளவும் அவன் முயற்சித்ததால், அவளின் ஒவ்வொரு செயலுக்கும் ஏதேனும் காரணம் கண்டுபிடிப்பது அவனுக்கு எளிதாக இருந்தது...

   

என்ன ஒன்று, அது சரியா தவறா என்பது தான் அவனுக்கு தெரியாது...!

   

🌼🌸❀✿🌷

   

இப்படியே நாட்கள் செல்ல அவர்களின் முதல் திருமண நாளும் வந்து சேர்ந்தது...

   

“கீர்த்தி, வீட்டுல அம்மா நம்ம வெடிங் அனிவர்சரிக்கு சின்னதா ப்ரோக்ராம் ப்ளான் செய்திருக்காங்க... ஒரு சிக்ஸ் போல போனால் போதும்... நீ...” 

   

தியாகுவை தொடர்ந்து பேச விடாமல் தடுத்து,

   

“நிறுத்துங்க... இந்த கல்யாணமே ஒரு ஜோக்... இதோட அனிவர்சரி செலிபரேஷன் வேறயா? அதெல்லாம் வேண்டாம்...” என சீறினாள் கிருத்திகா.

   

“பிடிச்சோ பிடிக்காமலோ நாம ஒன்னா லைஃப் லீட் செய்றோம்... இதுல எனக்குனு சில ரெஸ்பான்சிபிலிடிஸ் இருக்கு, உனக்குன்னு சிலது இருக்கு... உனக்கு பிடிக்காததை நான் அவாயிட் செய்துட்டு, பிடிச்சதை மட்டுமே செய்ய முயற்சிக்குறேன்... அதே போல இந்த ஒரு 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.