"சரி சஞ்சீவ்... இந்து போய் சஞ்சீவை அனுப்பிட்டு வா...." என்றாள் கீதா.
அதற்கு மேல் மறுக்க முடியாமல், தலை அசைத்து விட்டு, சஞ்சீவை தொடர்ந்து சென்றாள் இந்து.
அவள் முகத்தை ஒரு பார்வை பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் காரை கிளப்பி சென்றான் சஞ்சீவ். ஒரு சில நிமிடங்கள் கார் சென்ற திசையை பார்த்தப்படி நின்ற இந்து, பின் மனதில் சஞ்சலத்துடன் வீட்டின் உள்ளே வந்தாள். அவள் வருவதற்காகவே காத்திருந்த கீதா,
"என்ன இந்து இன்னும் முகம் சரியாகலை..." என்றாள்.
"ப்ச்...."
"எதுக்கு இப்போ இத்தனை அலுப்பு? இங்கே வா நான் உனக்கு ஒரு விஷயம் காட்டனும்..."
"ப்ச், இப்போ வேண்டாம் அக்கா. சப்பாத்தி எல்லாம் சுட்டு முடிச்சாச்சா?"
"அந்த வேலை முடிஞ்சாச்சு... நீ இங்கே வாயேன்..."
இந்து அமைதியாக கீதாவை தொடர்ந்தாள்.
"இப்போ சஞ்சீவ் பேச்சுக்காக தானே நீ இப்படி மூட் அவுட் ஆகி இருக்க? இங்கே பார்..."
எந்த வித சுவாரசியமும் இல்லாமல் கீதா சுட்டி காட்டிய பாத்திரத்தைப் பார்த்தாள் இந்து.
"என்ன இந்து இன்னும் புரியலையா? இதில் தான் நீ செஞ்ச சப்பாத்தி எல்லாம் இருந்தது... மொத்தம் ஆறு சப்பாத்தி... இப்போ ஒன்னு கூட மீதம் இல்லை... வ
{/f90filter}
ேற என்ன, சரியா சாப்பிட முடியலைன்னு புலம்பிட்டு போன சார் சாப்பிட்டது தான்... இப்போ புரியுதா? பொதுவா அய்யா நாலு சப்பாத்தி கூட சாப்பிட மாட்டார்... இன்னைக்கு என்ன ஸ்பெஷல்ன்னு நான் சொல்லவே