செய்தான்.
ஓரளவிற்கு மேல் காஞ்சனாவினால் சஞ்சீவி கட்டுப்படுத்த இயலாமல் போனது. இப்படி தன்னிஷ்டம் போல் வாழ்ந்த, வளர்ந்த சஞ்சீவ், தீய பழக்க வழக்கங்களுக்கு இரையாகாமல் இருந்தற்கு முக்கிய காரணம் அவனின் நட்பு வட்டம். அவனுடைய நட்பு வட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் பணக்காரர்கள் என்று சொல்ல முடியாது. தன் குடும்பத்தின் மேன்மைக்காக கல்வி கற்றவர்கள், தன்னுடைய குறிக்கோளை அடைய கல்லூரி வந்தவர்கள் என பல வகையினர் இருந்தனர். குடும்பத்துடன் ஒட்டாது இருந்த சஞ்சீவிற்கு கல்லூரி நாட்களில் உலகமே அவனின் நட்பு வட்டம் தான். பண உதவி முதல் காதல் தூது வரை அனைத்தையும் அவனின் நண்பர்களுக்காக, தோழிகளுக்காக செய்திருக்கிறான்.
கல்லூரி முடித்து அனைவரும் ஒவ்வொரு திசை சென்று தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தப் போதும், சஞ்சீவ் பெரிதாக மாறிவிடவில்லை. அவன் எம்.பி.ஏ படிக்க போவதாக சொன்ன போது ராஜீவ் சொன்ன அறிவுரைகள் எதையுமே அவன் காது கொடுத்தும் கேட்கவில்லை. ஏன் ராஜீவின் காதல் விஷயத்தினால் வீட்டில் பெரிய புயல் அடித்தப் போதும் கூட கண்டும் காணாமலும் தான் இருந்தான். ராஜீவின் திருமணம் முடிந்த சில நாட்களில் அமெரிக்கா சென்றவன், மீண்டும் சென்னை திரும்பிய பின் எதிர்பாராத விதமாக அவனின் வாழ்வே தலைகீழாக மாறியது!!!
கீதாவினால் வீட்டில் ஏற்பட்டிருந்த மாற்றங்களை பார்த்து ஆச்சர்யப் பட்டவன், இந்துவுடன் ஏற்பட்ட அந்த எதிர்பாராத சந்திப்பால் மிகவும் மாறி போனான்.... இந்துவை சந்திக்கும் வரை என் வாழ்க்கையை என் விருப்பம் போல் வாழ்வேன் என்ற எண்ணத்துடன் வாழ்ந்தவன், அவளை சந்தித்த பின் அவளுக்காக தன்னை முழுமையாக மாற்றிக் கொண்டான். அவளின் பெற்றோரின் கம்பெனி அளவிற்கு இல்லை என்றாலும் அவளை திருமணம் செய்துக் கொள்ளும் தகுதி பெற தானும் தனியே ஏதேனும் துவங்கி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் அவனின் மனதில் தோன்றியது.
பல இடங்களில் பல பெண்களுடன் அவன் பழகி இருந்த போதும் ஒரு எல்லையை தாண்டி, நட்பு என்னும் வட்டத்தை தாண்டி,
{/f90filter}அவனை எந்த பெண்ணும் ஈர்த்தது இல்லை. முதல் பார்வையிலேயே அவனை தலை குப்புற காதலில் விழ செய்தது இந்து மட்டும் தான்... அவளுக்காக எதையும் செய்ய அவன் தயாராக இருந்தான். அவனுக்கு அவனின் அம்மா,