வயதில் சாக்லெட்டிற்கு அடம் பிடித்து அழுத சிறுமி இந்துவாகவே தோன்றினாள். வாஞ்சையுடன், அவளின் கேசத்தை வருடிய அர்ச்சனா,
"இந்து, காஞ்சனா இடத்துல யார் இருந்தாலும் கோபப் பட்டிருப்பாங்க... உண்மையில் காஞ்சனாவுக்கு ஏன் கோபம் தெரியுமா? உன்னையும் கீதாவையும் அங்கே வந்திருந்தவங்களுக்கு அறிமுகப் படுத்தி பெருமை படலாம்னு நினைச்சாங்க...ஆனால் நீ வராமல் அவங்க ஆசை நிறைவேறாமல் போச்சு... மகன்கள் இரண்டுப் பேரும் பக்கத்தில் இருந்தும் மருமகள் வரலைன்னு ஃபீல் செய்யும் மாமியார் உனக்கு மட்டும் தான்.... நீ ரொம்ப லக்கி," என்றாள்!
"ம்க்கும்...."
"கம் ஆன் இந்து! நீயே சொல்லு, நீயா இருந்தா வேற என்ன செய்வ? ஆமாம் உன் செல்ஃபோன்க்கு என்ன ஆச்சு?"
"வீட்டிலேயே மறந்து வச்சிட்டுப் போயிட்டேன் அம்மா..."
"ஓஹோ! நீ அப்படி எல்லாம் மறக்க மாட்டீயே?"
"ம்ம்ம்... ஆமாம், மொபைலொடு கிளம்பின ஞாபகம் இருக்கு, கீதா அக்கா கூப்பிட்டாங்கன்னு ஹேண்ட்பேக்கை வச்சுட்டு வந்தேன். அப்போ பக்கத்துல எங்கேயோ வச்சிருக்கனும்..." என்றாள் இந்து கொஞ்சம் தயக்கத்துடன்.
அவளின் தயக்கத்தை கவனித்த அர்ச்சனா, அதை பற்றி கேட்காது,
"சரி, அது போகட்டும், ஃபங்க்ஷனுக்கு நேரா வந்திருக்கலாம் தானே? அதை விட இந்த ஷாப்பிங் முக்க
{/f90filter}
ியமா? சஞ்சீவோட ஃப்ரென்ட் கிட்ட சொல்லி இருந்தா அவளுக்கும் புரிஞ்சிருக்கும் தானே?"
இந்துவிற்கு என்ன ஃபங்க்ஷன் என்றே தெரியாதே! என்ன சொல்வது என்று சிறிது தயங்கி விட்டு,