“என்ன அண்ணா ஆச்சு? ஷாக் ஏதாவது அடிச்சிடுச்சா என்ன?”
“அக்கா, இந்தாங்க அத்தானுக்கு காஃபி கொடுங்க, மயக்கம் தெளியுதான்னு பார்ப்போம்...”
மற்றவர்கள் மேலும் கிண்டலை தொடர, ராஜீவ் கீதா ஒரு முறைப்புடன் கொடுத்த காஃபியை வாங்கிக் கொண்டு செல்லமாக கண் சிமிட்டி விட்டு சென்றான். பேச்சும் சிரிப்புமாக சமையல் வேலையும் மும்முரமாக நடந்தது.
🌼🌸❀✿🌷
கதை சொல்லி ரோஷினிக்கு காலை உணவு ஊட்டிக் கொண்டிருந்த வீணாவின் கண்களில் கிராமத்து இளைஞன் ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்த சஞ்சீவ் தென்பட்டான். அப்போது தான் காலையில் இருந்து இந்துவை பார்க்காதது அவளின் நினைவில் வந்தது. சற்று தள்ளி அமர்ந்திருந்த கீதாவின் பக்கம் திரும்பி,
“கீதா அக்கா, இந்து எங்கே? ஆளையே காணும்?” எனக் கேட்டாள்.
“அவளும் கண்மணியும் கம்ப்யூட்டர்ல ஏதோ செய்துட்டு இருக்காங்க... “
“ஓ!”
வீணாவின் பதில் ஒலித்த தோரணையில் தோழி பக்கம் திரும்பிய கீதா, அவளின் முகத்தில் இருந்த கேள்வியை கவனித்து, அவளருகில் வந்தாள்.
“என்ன விஷயம் வீணா?”
“அது... கல்யாணம் ஆகி வருஷக் கணக்கானால
{/f90filter}
ும் இன்னமும் அவினாஷும் ராஜீவும் எப்படி இருக்காங்க... இந்த சஞ்சீவ் ஏன் இப்படி இருக்கார்?”
“வீணா, இந்து தான் எந்த பிரச்சனையும் இல்லைன்னு சொன்னாளே... இன்னும் நாம இதுல