“சஞ்சீவ், கொஞ்சம் ஸ்லோவா போங்க, எனக்கு பயமா இருக்கு...”
ரொம்ப நாட்களுக்குப் பிறகு இந்து அவன் பேரை சொல்லி அழைக்கவும், சஞ்சீவ் அவள் பக்கம் திரும்பி பார்த்தான். ஒன்றும் தெரியாத அப்பாவி போல் முகத்தை வைத்திருந்தவளை பார்த்து விட்டு,
“அது தான் முருங்கை மரத்தை விட்டு இறங்கி வர மாட்டேன்னு அடம் பிடிக்கிறீயே, அப்புறம் இந்த பேர் சொல்லி கூப்பிடுறது மட்டும் எப்படி?” என்றான்!
முருங்கை மரமா? நான் என்ன வேதாளமா என மனதில் சிணுங்கிய இந்து, இரு இரு, உன்னை அப்புறம் இதுக்காக கவனிச்சுக்குறேன், என முடிவு செய்து விட்டு,
“நீங்க சொன்னதை தானே செஞ்சேன்! நீங்க தான் உங்களை பேர் சொல்லி கூப்பிட வேண்டாம்னு சொன்னீங்க, சரின்னு நான் கூப்பிடலை. நேத்து நீங்க தானே பேர் சொல்லி கூப்பிடலாம்னு சொன்னீங்க...” என்று ‘விளக்கமும்’ கொடுத்தாள்.
“ஓஹோ! நான் அதை மட்டும் தான் நேத்து சொன்னேனா? வேறு எதையும் சொல்லலையா?”
“ம்ம்ம்...”
“அது தானே, அதெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்காதே.... உன்னை வச்சுட்டு...”
“என்னது வச்சுக்கிட்டா? இது என்ன லாங்க்வேஜ்?”
“அம்மா தாயே, தெரியாம சொல்லிட்டேன், இதுக்கு வேற புதுசா ஏதா
{/f90filter}
வது சொல்லாதே... நானே ஏற்கனவே கடுப்புல இருக்கேன்...”
“சரிங்க...”
இந்து சாதுவாக சொன்ன பதில் கேட்டு திரும்பி முறைத்தாலும் சஞ்சீவிடம் முன்பு இருந்த