பெண்ணை சுட்டிகாட்டிய படி.
"அடடா மறந்துட்டேன் பாரு! அவங்க என்னோட கம்பார்ட்மென்ட்ட்ல வந்தவங்க. ஹாஸ்டல் அட்ரஸ் தரேன்னு சொன்னாங்க, வாங்கிட்டு வந்திடுறேன்..."
சொன்னது போல் விரைந்து பேசிவிட்டு வந்த நந்திதா,
"வாங்க போகலாம்..." என்றாள்.
"நந்து, நீ ட்ரெயின்ல இருந்து இறங்கி யாரையோ தேடின மாதிரி இருந்துச்சே. யாரையாவது வர சொன்னீயா என்ன?"
"வேற யாரை தேட, உன்னை தான் தேடினேன் ஒசிமம்!"
"என்னையா? நான் ஸ்டேஷன் வரது உனக்கு தெரியுமா என்ன?"
"காட்பாடி ஜங்க்ஷன் வரைக்கும் தெரியாது. சரத் ஃபோன் செய்தார்..."
"என்னது???? அவர் ஏன் ஃபோன் செஞ்சார்?"
"நீ சின்ன குழந்தையாம்! உனக்கு ஒன்னும் தெரியாதாம்! சென்ட்ரல் ஸ்டேஷன் கூட்டத்துல நீ காணாம போகாம உன்னை பத்திரமா கையை பிடிச்சு அழைச்சிட்டு வீட்டுக்கு கூட்டிட்டுப் போக சொன்னார்..."
"அவரை..." என துளசி பற்களை கடிக்க,
"அவருக்கு எப்படி ஒசிமம் தெரியும், ஆன்ட்டி ஒரு படி மேல போய் உனக்கு பாடிகார்டா வருவாங்கன்னு?" என்றாள் நந்திதா கேலியாக.
"ஹேய்!!! பெரியவங்க நந்து... அத்தையை அப்படி எல்லாம் கிண்டல் செய்யாதே!"