தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 10 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
கண்களை உருட்டிய துளசி, "கோழி ஏன் முட்டை போடுதா??? அதானே, ஏன் போடுது????" என்றாள்!
"ஏன்னா, அதுக்கு ஒன்னு, இரண்டு, மூணு, நாலு எல்லாம் தெரியாது அது தான் முட்டை போடுது," என தோழியை போலவே கண்களை உருட்டிக் கொண்டே சொன்னாள் நந்திதா.
"ஹா ஹா..." காமட்சியால் சிரிப்பை அடக்க இயலவில்லை.
"ஒருத்தர் பல் வலிக்காக டாக்டரை பார்க்க போனார், ஆனால் அங்கே லேடி டாக்டர் இருக்கவே திரும்பி வந்துட்டார்... ஏன்?"
"அந்த டாக்டர் டென்டிஸ்ட் இல்லை..."
"தப்பு..."
"வேறென்ன?"
"நானே சொல்றேன்... அவர் எந்த பொண்ணுகிட்டேயும் பல்லைக் காட்டி நிற்காத வீராதி வீரர்..."
"அம்மாடியோ! ப்ளேட் தாங்கலை நந்து! போதும் விட்டுடு!"
"இன்னும் ஒன்னே ஒன்னு... ஒருத்தர் கிராமத்தில ஆத்துல துணி துவைச்சிட்டே இருந்தார், திடீர்னு வெள்ளம் வந்து, துணியை அடிச்சிட்டு போச்சு... இவர் விடாமல் துரத்தி, எல்லா துணியையும் எடுத்துட்டு வந்துட்டார். இந்த சிச்சுவேஷன்ல அவர் என்ன பாட்டு பாடுவார்?"
"வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்...!" என்றார் ராஜசேகர்.
"தப்பு அங்கிள்!"
"அறுவை மன்னியே, நீயே சொல்லு!"