"போங்க ஆன்ட்டி! இந்த பொண்ணு வேற பின்னா குத்தி பயமுறுத்தி விட்ருக்கா..."
"பின்னா????"
"ஆமாம் அத்தை, இவளை பத்தி உங்களுக்கு தெரியாது... வேலை செய்ய ஆரம்பிச்சுட்டா, உலகத்தையே மறந்துப் போயிடுவா... சாரீ அப்படி இப்படி இருந்தாலும் கவனிக்க மாட்டா! எதுக்கு எல்லோருக்கும் ஃப்ரீ ஷோ தரணும்னு இரண்டு டப்பா பின் குத்தி கொடுத்திருக்கேன்... ப்ளீட்ஸ் மட்டுமில்லை, கொசுவம் சைடும் கூட ரொம்ப ஸ்ட்ராங்," என்று விளக்கமாக சொன்னாள் துளசி!
"ஹா ஹா ஹா! நல்ல பொண்ணுங்க! எங்க அம்மா கேட்ருக்கனும் இதை எல்லாம்! ட்ரஸ் எப்படி இருக்குன்னு கூட தெரியாம வேலை செய்வீங்களா?"
"அவ தான் சொல்றான்னா நீங்களும் நம்புறீங்களே ஆன்ட்டி!!!"
"சரி சரி, டைமாச்சு நந்து! சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு, முதல் நாளே லேட்டா போக கூடாது," என்றாள் துளசி.
அதை கவனித்து, "எப்படி போக போற நந்து?" என காமாட்சி விசாரிக்க,
"ஆட்டோல போகலாம்னு இருக்கேன் ஆன்ட்டி..." என்றாள் நந்திதா.
"வேண்டாம் வேண்டாம்... நான் எங்க டிரைவர் கிட்ட சொல்றேன், நீ கார்ல போ..."
"இல்லை ஆன்ட்டி, ப்ளீஸ் வேண்டாம்..."
"நான் சொன்னால் சொன்னது தான்... போ போய் சாப்பிட்டுட்டு கிளம்புற வழியை பாரு..."
நந்திதாவிற்கு காரில் செல்ல விருப்பம் இருக்கவில்லை... அதற்காக பெரியவளான