யோசிச்சிட்டே இருக்கேன்... சொல்ல வேண்டாம்னு தான் தோணுது ஆனால் மனசு வர மாட்டேங்குது..."
"என்ன விஷ்யம்க்கா? சொல்லுங்க..."
"நேத்து செல்வி மாமனாருக்கு முடியலைன்னு ஹாஸ்ப்பிட்டல்ல அட்மிட் செய்திருந்தாங்க, அவரை பார்க்க போனப்போ தான் பார்த்தேன்..."
"என்ன பார்த்தீங்க?"
"உன் மாமியாரை அங்கே அட்மிட் செய்திருக்காங்க..."
"என்னக்கா சொல்றீங்க?" என்றாள் சரண்யா பதற்றத்துடன்.
"நீ எதுக்கு இப்படி பதறுற? சின்ன குழந்தையோட தனியா நிக்குற, கொஞ்சம் கூட ஈரமே இல்லாமல் உன்னை இங்கே தனியா விட்டு வச்சிருந்தவங்களை பத்தி உனக்கு ஏன் கவலை?"
"அதை விடுங்க அக்கா... சொல்லுங்க அத்தைக்கு என்ன?"
"அங்கே உன் கொழுந்தன் இருந்தான்... பேசினேன்... நேத்து காலையிலே திவசம் முடிச்சிட்டு கார்ல கிளம்பினப்போ திடீர்னு நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னாங்களாம்... ஹாஸ்ப்பிட்டல்ல அட்மிட் செய்து ஏதேதோ டெஸ்ட் எடுத்துட்டு சர்ஜரி செய்யனும்னு சொல்லிட்டாங்களாம்..."
"ஐயையோ..."
❀✿❀✿❀✿
அடுத்த அரை மணி நேரத்தில் அந்த மருத்துவமனையில் இருந்தாள் சரண்யா!
நிஷாவை சுலோச்சனாவிடம் விட்டு வந்திருந்தாள்.