Malaiyil yaaro manathodu pesa - Tamil thodarkathai
Malaiyil yaaro manathodu pesa is a Family / Romance genre story penned by Bindu Vinod.
-
Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 01 - பிந்து வினோத்
சரண்யா நிஷாவை கையில் தூக்கிக் கொண்டு, ஒரு ஓரமாக நின்று கணவனையே பார்த்திருந்தாள்.
மூன்று வருட உறவு என்றாலும் பல பல வருடங்களாக தொடர்ந்து வந்ததைப் போல கோபியுடன் அவளுக்கு ஒரு இனிமையான பந்தம் ஏற்பட்டிருந்தது.
-
Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 02 - பிந்து வினோத்
சரண்யாவிற்குள்ளே எத்தனை எத்தனையோ கேள்விகள்... கூடவே, ஒரே ஒரு முறை அவனுடன் பேசுவதற்காவது வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கம்...
அவளையும் மீறி பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.
-
Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 03 - பிந்து வினோத்
அவன் நடந்து சென்றப் போது அவன் மற்றவர்களை கவனித்தானோ இல்லையோ, மற்றவர்கள் அவனை கவனித்தார்கள்! முன் முப்பதுகளில் இருந்தவனிடம் வெற்றியுடன் மட்டுமே வரும் நம்பிக்கை மிளிர்ந்தது. அவன் அணிந்திருந்த நேர்த்தியான கோட், அவனின் பரந்த தோள்களையும், சீரான உடலமைப்பையும் எடுத்துக் காட்டியது! அவனின் நடையில் கூட
... -
Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 04 - பிந்து வினோத்
எதிரே இருந்தவளை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்த சேகர்,
"பேசாமல் கம்பெனியை வித்துடுறது தான் நல்லது சரண்யா," என்றார்.
-
Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 05 - பிந்து வினோத்
அந்த மித்ரன் அதற்கு சம்மதிப்பானா?
அவனுக்கு பிடித்தது போல வேலை செய்ய அவளால் இயலுமா?
கடந்த ஒரு மாதத்தில் அவனை சந்தித்த மூன்று வேளையிலும் எதனாலோ அவளுக்கு சிங்கம், புலி, கரடி என காட்டு மிருகங்கள் தான் நினைவுக்கு வந்தது....!
அவனின் பேச்சும், தோரணையும், முன் கோபமும்....
... -
Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 06 - பிந்து வினோத்
மித்ரனின் ‘ஐ டோன்ட் கேர்’ அடிட்ட்யூடை ஜீரணிக்க முயன்றபடி, சரி என தலையை ஆட்டினாள் சரண்யா... இவனிடம் வேறு என்ன சொல்வது???
-
Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 07 - பிந்து வினோத்
எப்போது, என்ன, ஏது, என்று கணிக்க முடியாத அவனின் கோபங்களும், அருகே யார் இருக்கிறார், எந்த இடத்தில் இருக்கிறோம் என்று பாராமல் கண்மூடித்தனமாக பேசும் அவனின் குணமும், அவளை திக்குமுக்காட செய்திருந்தன.
-
Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 08 - பிந்து வினோத்
“அப்போ யோசிச்சு முடிவு எடு சரண்யா... புதுசா போற இடம் எப்படி இருக்கும், யார் இருப்பா, எதுவும் தெரியாதே... ஒரு பழமொழி சொல்வாங்க தெரியுமா... தெரியாத தேவதையை விட தெரிஞ்ச சைத்தான் பரவாயில்லைன்னு! யோசிச்சு முடிவெடு...”
-
Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 09 - பிந்து வினோத்
மைத்ரேயியை சந்திக்கும் முன்பே அவள் மீதான மதிப்பு சரண்யாவினுள் பல மடங்கு அதிகரித்தது.
-
Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 10 - பிந்து வினோத்
“மித்ரன்...! சிங்கப்பூர்ல இருந்து வந்திருக்க மித்ரன்...”
சரண்யா சொன்னதை மைத்ரேயியின் உதடுகள் முணுமுணுத்தன...
-
Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 11 - பிந்து வினோத்
‘ஏன் என்னை இந்த கெட்ட உலகத்துல தனியா விட்டுட்டு போனீங்க கோபி? நிஷா மட்டும் இல்லைன்னா என் வாழ்க்கையை நான் எப்போவோ முடிச்சிருப்பேன்... நிஷாவை எப்படி வளர்க்க போறேன்? செலவுக்கு என்ன செய்ய போறேன்? எனக்கு ஒண்ணுமே புரியலையே...’
-
Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 12 - பிந்து வினோத்
மித்ரனால் ஒருவர் மீது அதிக அன்பையும் வைக்க முடியும், வேறொருவர் மீது அதிக வெறுப்பையும் வைக்க முடியும்... எதிலுமே அவனுக்கு எக்ஸ்ட்ரீம் தான்!
-
Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 13 - பிந்து வினோத்
“எனக்கு உன்னை புரிஞ்சுக்கவே முடியலைண்ணா... சரண்யா நீ வாங்கின கம்பெனில இருந்தப்போ அவளை உனக்கு பிடிக்காமல் போனதை கூட என்னால புரிஞ்சுக்க முடியுது... இப்போ தான் அவ அங்கே இருந்து வந்துட்டாளே... அப்புறமும் என்ன?”
-
Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 14 - பிந்து வினோத்
“இன்னைக்கு நீங்க சாரி கேட்குற மூட்ல இருக்கீங்க போலிருக்கு! மித்ரன் உங்களுக்கு யாரா இருந்தாலும் அது எனக்கு தேவையான விஷயமே இல்லை... அவர் உங்க அண்ணனா இருந்தும், நான் அவரை பத்தி அவ்வளவு கம்ப்ளெயின்ட் செய்த பிறகும். கோபப்படாம எனக்கு வேலை கொடுத்ததுக்கு நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனும்...”
-
Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 15 - பிந்து வினோத்
மித்ரன் ஜெயில் கம்பிகளின் பின் இருப்பதாக கண்ணில் தெரிந்த கற்பனை சரண்யாவிற்கு சந்தோஷத்தையே கொடுத்தது.
நன்றாக வேண்டும் அவனுக்கு... படட்டும்...
Page 1 of 2